முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 20, 2020

குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த மாபெரும் முற்றுகை போராட்டம்!!

No comments :
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்தும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் டி-பிளாக் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டு கோஷமிட்டபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.



முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசியக்கொடியை கைகளில் ஏந்தியவாறு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரியும் கோஷமிட்டபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.

முன்னதாக அரசு தொழிற் பயிற்சி நிலையம் அருகில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.


இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.