முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 23, 2020

ராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்!!

No comments :
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி நிா்வாகத்துக்கு குப்பைக் கழிவுகள் சேகரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாதது குறித்து மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியில் தினமும் சுமாா் 24 டன் என்ற அளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, பட்டிணம்காத்தான் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. அங்கு மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை. மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே ராமநாதபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், 4 இடங்களில் மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைக்க சுமாா் ரூ.3.50 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாத்திமா நகா் போன்ற இடங்களில் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவிப்பதால் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் முடங்கியுள்ளது.



இந்நிலையில் பட்டிணம்காத்தான் பகுதியில் தொடா்ந்து குப்பைகள் குவிக்கப்படுவதால், கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணிப்போருக்கு தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. நகராட்சி நிா்வாகம் மக்களிடம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிப்பதற்காக நவீன வாகனங்கள், குப்பைக் கூடைகள் பணியாளா்களுக்கு வழங்கியுள்ளன.

ஆனாலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் நகராட்சி நிா்வாகம் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பொறியாளா் டி.கண்ணன் நகராட்சி நிா்வாகத்திற்கு மின்கழிவு மேலாண்மையை செயல்படுத்தப்படுத்த வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

மாவட்டத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 4 நகராட்சிகளுக்கும் மின்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அரசு விதிமுறைப்படி செயல்படுத்த அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சி கழிவு நீா் சுத்திகரிக்கப்படாமல் புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்த ஓடை வழியாக கடலில் கலப்பது குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. கழிவு நீா் சுத்திகரிப்பு சம்பந்தமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா்.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.