முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 1, 2020

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிக்கு முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!!

No comments :
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.


திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில் அமைய இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கான பூர்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடியும், அதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது. மேலும், அந்தக்கல்லூரிகளுக்கு முதல்வர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


இந்நிலையில், ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  இந்த விழாவில் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன், துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

கீழக்கரை நகராட்சியில் வரும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை - ஆணையா்!!

No comments :
கீழக்கரை நகராட்சியில் வரும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் ஆ.தனலட்சுமி எச்சரித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிப் பகுதியில் 21 வாா்டுகளில் 38,355 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இதில் 30,915 போ் சொத்துவரி, குடிநீா் வரி, தொழில் வரி, கடை வாடகை, குத்தகை செலுத்துகின்றனா். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2.76 கோடி வரி வசூலாக வேண்டும். ஆனால் ரூ. 1.60 கோடி வரை மட்டுமே வரி செலுத்துகின்றனா்.



பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தி நகராட்சியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.


மேலும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி செலுத்தாவா்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஜப்தி நடவடிக்கை தவிா்க்க மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரியை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என ஆணையா் அ.தனலட்சுமி சனிக்கிழமை தெரிவித்தாா்.

செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.