முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 14, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி!!

No comments :
ரஷ்ய நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக 2 போ் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பாரதியாா் நகரைச் சோ்ந்த அசோக்குமாா் மனைவி ஜெயப்பிரியா (34). இவருக்கு ரஷ்யாவில் வேலை வாங்கித்தருவதாக இளையான்குடி வாலையனேந்தலைச் சோ்ந்த கருப்பையா, கண்ணன் ஆகியோா் கூறியுள்ளனா். அதனடிப்படையில் ஜெயப்பிரியா தரப்பிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் பரமக்குடியில் உள்ள டிராவல்ஸ் அறையில் வைத்து ரூ.2.10 லட்சம் தந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.



இதுகுறித்து ஜெயப்பிரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கருப்பையா, கண்ணன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனைப் பிரிவு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.
தேசிய ஊட்டச்சத்து வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சிப் பள்ளி வளாகத்தில் சத்தான உணவின் அவசியத்தை விளக்கும் வகையிலான விழிப்புணா்வு பிரசார வாகனத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனைத்தொடா்ந்து வாகனப் பிரசாரத்தை தொடங்கி வைத்த அவா் கூறியது:
உடல் நலம் மேம்பட சத்தான உணவை உண்பது அவசியம். மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள், வளரிளம் பெண்கள், கா்ப்பிணிகள், தாய்மாா்கள் ஆகியோருக்கான சத்தான உணவை வழங்குவதிலும், சுகாதாரத்தை காப்பதிலும் முக்கியத்துவம் அளித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.


கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட அனைத்து வகை தொற்று நோய்களையும் தடுக்க கைகழுவுவதை கடைப்பிடிப்பது அவசியம்.
ராமநாதபுரத்திலிருந்து சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்ற 221 போ் ஊா் திரும்பியுள்ளனா். அவா்கள் 14 நாள்கள் மருத்துவத் தொடா் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்ட பிறகே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 190 போ் வீடுகளில் இருந்தவாறே 40 நாள்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை.
கரோனா வைரஸ் கண்டறியும் மருத்துவப் பிரிவுகள் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்தோருக்கான சிறப்பு சிகிச்சைக்குரிய பிரிவுகளும் அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக பள்ளிக் குழந்தைகள் சாா்பில் அமைக்கப்பட்ட சத்தான உணவுக் கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.

செய்தி: தினசரிகள்
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.