முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 29, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை விடுத்துள்ள செய்தி:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர் மற்றும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

ஆகவே சம்பந்தப்பட்டோர் விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை, ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது தபால் மூலமோ அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

சாயல்குடி அருகே கோயில் சிலைகளை உடைத்தவர் கைது!!

No comments :
சாயல்குடி அருகே கோயிலில் உள்ள சிலைகளை உடைத்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

சாயல்குடி அருகேயுள்ள எஸ்.கீரந்தை கிராமத்தில் அழகர் மலையான் கோயில் உள்ளது.

இந்த கோயில் வளாகத்தில் இருந்த பிள்ளையார், ராக்காச்சி அம்மன், கருப்பணசாமி ஆகிய சிலைகளை மர்ம நபர் உடைத்து சேதப்படுத்திவிட்டு, தலைமறைவாகி விட்டார்.



இதுகுறித்து கிராமத் தலைவர்சந்திரசேகர் சாயல்குடி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் சாயல்குடி துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த ரிஷி முனியசாமி (35) என்பவர் மது போதையில் கோயில் சிலைகளை உடைத்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.