முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 29, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் முழுமையாக பஸ்களை இயக்குவது எப்போது?!!

No comments :

 ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவான அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள்நெரிசலில் அவதிப்படுகின்றனர்.

 

 

முழுமையாக பஸ்களை இயக்குவது எப்போது, என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா ஊரடங்கு விதிமுறை முழுமையாக தளர்த்தப்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதி அரசு பஸ்கள் செப்.,1 முதல் இயக்கப்படுகின் றன. ஆனால் இன்னும் ஏராளமான கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து துவங்கவில்லை. நகர் பகுதிகளிலும் 70 சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.

 

 

மக்கள் பஸ்சுக்காக காத்துஇருக்கும் நிலை உள்ளது. அலுவலக வேலை நேரங்களிலும் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் பல ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் நெரிசலில் மக்கள் பயணிக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முன்பு 120 டவுன் பஸ்கள் உட்பட 323 அரசு பஸ்கள்பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

 


 

மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்குள் 100 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. இதன்படி 423 பஸ்கள் இயக்கப்பட்டதில் தற்போது 296க்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் நலங்கிள்ளியிடம் கேட்ட போது, கொரோனா பரவலை தடுக்க அரசு உத்தரவின்பேரில் தற்போது 70 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 

 

அக்.1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டால் 80 சதவீதம் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கிராமங்களில் மக்கள் டூவீலர் பயணத்திற்கு மாறியுள்ளனர். பஸ்களை இயக்க கோரிக்கை விடுத்தால் இயக்குகிறோம்.பொதுவாக இரவு 7:00 மணிக்கு மேல் மக்கள் வெளியூர் செல்வதை தற்போது விரும்புவதில்லை. இதனால் இரவு நேர பஸ் இயக்கம் குறைக்கப்பட்டுஉள்ளது. இயல்பு நிலை வரும் வரை இந்த நிலை தொடரும், என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.