(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 13, 2021

அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை அக்.,30 வரை நீட்டிப்பு!!

No comments :

ராமநாதபுரம் , பரமக்குடி, முதுகுளத்துார், ஆகிய அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை அக்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார் ஆகிய அரசு ஐ.டி.ஐ.,களில் 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடந்தது. அதன்பிறகு காலியாக உள்ள அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் நேரடி மாணவர்சேர்க்கை அக்.,10 வரை நடந்தது, மேலும் அக்., 30 நீட்டிக்கப்பட்டுள்ளது.

 


எட்டு, பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 14வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு வயதுவரம்பு இல்லை.

 

 

பயிற்சில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரடியாக வந்து காலியாக உள்ள தொழிற்பிரிவை தேர்வு செய்யலாம்.

 

கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750, அரசு சலுகைகள் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் பயிற்சிவழங்கப்படும் என மாவட்டதிறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment