(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 27, 2021

விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மாவட்டத்தில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டும் பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்.

 

விவசாயிகள் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அங்கக விளை பொருட்களை பதப்படுத்துவோர், விற்பனை, ஏற்றுமதி செய்பவரும் பதிவு செய்யலாம். 


இதற்கு பண்ணையின் பொது விபரகுறிப்பு, பண்ணையின் வரைபடம்,ஆண்டு பயிர்த்திட்டம், மண், பாசன நீர் பரிசோதனை விபரம், நில ஆவணம், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கட்டணம் செலுத்த வேண்டும்.கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வனப்பொருள் சேகரிக்கும் நபர்களும் பதிவு செய்யலாம். 



சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2700, 

பிற விவசாயிகள் ரூ.3200, 

விவசாயிகள் குழுப்பதிவிற்கு ரூ.7200 

மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400 

என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விபரங்களுக்கு விதைச்சான்று உதவி இயக்குனரை அணுகலாம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment