முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 9, 2021

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுபதிவு இயந்திரங்கள்அனுப்பி வைப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுபதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்களை சட்டசபை தொகுதிவாரியாக அனுப்பிவைக்க, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கம்ப்யூட்டர் முறை ஒதுக்கீடு கூட்டம் நடந்தது.



மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது:

பரமக்குடி -357,

திருவாடானை- 417,

ராமநாதபுரம்- 431,

முதுகுளத்துார்- 442

என மொத்தம் 1647 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. முதல்நிலை பரிசோதனை முடிந்து 3206 ஓட்டளிக்கும் இயந்திரங்கள், 1966 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்க கூடிய 2232 இயந்திரங்கள்பாதுகாப்பு அறையில் உள்ளன.

 

 

இவை தேர்தல்ஆணையம் அறிவித்த கணக்கீட்டின் படி கம்ப்யூட்டர் முறையில் அந்தந்த தொகுதிகளுக்கு 30 சதவீதம் கூடுதலாக கையிருப்பு இருக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூட சேமிப்பு கிட்டங்கி பாதுகாப்பு அறையிலிருந்து போலீஸ் பாதுகாப்பு உடன் சட்டசபை தொகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்,' எனக் கூறினார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

மார்ச் 1 முதல் புறநகர் பஸ் சேவைகளில் 'ஏசி' பஸ்கள்!!

1 comment :

 

அரசு போக்குவரத்து கழகங்களில் மார்ச் 1 முதல் புறநகர் பஸ் சேவைகளில் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தற்போது 10 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. கும்பகோணம் கோட்டம் ராமேஸ்வரம் கிளையில் இருந்து மதுரைக்கு மூன்று 'ஏசி' பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இதே போல் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு 1 டூ 1 பஸ் ஒன்றும், ராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை, துாத்துக்குடிக்கு தலா ஒரு பஸ் இயக்கப்படுகிறது.



 

 

இதே போல் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஒரு பஸ், கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு பஸ் உட்பட மாவட்டத்திற்குள் பத்து 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 30 சதவீதம் அதிகமாக உள்ளது.

 

கோடை காலம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும், நீண்ட துார பயணத்தை 'ஏசி' பஸ்சில் செல்ல விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பயணிகளின் வரவேற்பை பொறுத்து 'ஏசி' பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என அவர்கள் தெரிவித்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.