முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 11, 2021

ராமநாதபுரத்தில் நவ.12ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.12) நடத்தப்படுகிறது.

 


முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளன. முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொள்ளலாம்.

 

தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் 2 புகைப்படங்களுடன் அன்று காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும்

 

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரையில் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் மாவட்டத்தில் உள்ள 1,691 வேளாண்மைக் கண்மாய்களில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் 70 சதவீதம் தண்ணீர் நிரம்பிக் காணப்படுகின்றன. கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் உள்ள வேளாண்மைக் கண்மாய்களில் பெரும்பாலானவை 40 சதவீதம் தண்ணீரால் நிரம்பியுள்ளன.

 


இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்):

 

ராமநாதபுரம் 3,

மண்டபம் 17.60,

ராமேசுவரம் 23.40,

பாம்பன் 25.40,

தங்கச்சிமடம் 22.20,

பள்ளமோர்க்குளம் 5.,

திருவாடானை 13.80,

தீர்த்தாண்டதானம் 19.8,

தொண்டி 16.50,

வட்டாணம் 21.30,

ஆர்.எஸ்.மங்கலம் 9.10,

பரமக்குடி 5,

முதுகுளத்தூர் 2.20,

கமுதி 4.40,

கடலாடி 2.40

 

என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதன்படி 15 இடங்களில் சராசரியாக 11.94 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

புதன்கிழமை காலை மற்றும் பகலில் ஓரிரு இடங்களில் சாரல் மழையே பெய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.