(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 23, 2022

தரமற்ற அரிசி விநியோகம்; இருவர் பணியிடை நீக்கம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு விநியோகித்ததாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

சாயல்குடியில், ராமநாதபுரம் மொத்த விற்பனை பண்டகசாலை கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடை (எண் 5) உள்ளது. இக்கடையில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.

 


புகார் குறித்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் கோவிந்தராஜன் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் நியாயவிலைக் கடை நகர்வுப் பணியாளர் மோகன் மற்றும் விற்பனைப் பணியாளர் வில்வதுரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment