(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 9, 2022

ராமநாதபுரத்தில் ஏப்-19 ஆம் தேதி பேச்சுப் போட்டிகள்; முதல் பரிசு ரூ.5 ஆயிரம்!!

No comments :


அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி வரும் ஏப். 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

ராமநாதபுரம் நகரில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு

முதல் பரிசாக ரூ.5 ஆயிரம்,

இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம்,

மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் என தனித்தனியாக வழங்கப்படும்.

 

போட்டிகளில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

 


பள்ளி அளவில் 30 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளனர். ஆகவே, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலரைத் தொடர்புகொண்டு பேச்சுப் போட்டியில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்.

ஒரு கல்லூரியில் இருந்து 2 பேர் மட்டுமே பங்கேற்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment