(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 12, 2022

ராமேசுவரத்தில் போலீசார் வாகனத்தை அனுமதிக்காததால், பெண் ஒருவர் உயிரிழந்தார்!!

No comments :

மகாராஷ்டிரா மாநிலம் டேஸ் முக் நகர் பகுதியில் இருந்து ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சந்தா பாய் (வயது72) ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர்.

 

தெற்கு ரத வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த இவர்களில் சந்தா பாய்க்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அந்த தங்கும் விடுதியில் இருந்து போலீசார் தடுப்பு பகுதிக்கு வந்து ஆட்டோ அல்லது வேறு ஏதாவது ஒரு வாகனத்தை அனுமதிக்குமாறும் அவரது குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

 

ஆனால் போலீசார் எந்த வாகனத்தையும் அனுமதிக்கவில்லை.

 


இதனால் ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்து சேர்ந்தது. பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சிறுது நேரத்துக்கு முன்னதாக இறந்ததாக தெரிவித்தார்.

 

பின்னர் அந்த பெண்ணின் உடலை சொந்த மாநிலத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

 

போலீசார் உடனடியாக வாகனத்தை அனுமதித்திருந்தால் இந்த இறப்பை தவிர்த்திருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் கூறினார்கள்.

 

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment