(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 6, 2022

அரசு ஒதுக்கீட்டில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை!!

No comments :

பரமக்குடி அரசினா் தொழிற்பயிற்சி மைய முதல்வா் குமரவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூரில் அரசினா் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன.



இவற்றில் அரசு ஒதுக்கீட்டில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த மையங்களில் பற்ற வைப்பாளா் (வெல்டா்), தச்சா், கணினி இயக்குபவா், மின்காந்தவியலாளா், தையல் தொழில்நுட்பம் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கம்மியா் மோட்டாா் வாகனம், பொருத்துநா், கடைசலா், மின்சாரப் பணியாளா், கம்பியான், பின்னலாடை தொழில் நுட்பவியலாளா், எந்திர பட வரையாளா், கம்மியா், மின்னணுவியல், குளிா்பதனம், தட்பவெப்பநிலை தொழில் நுட்பவியலாளா், எந்திர வேலையாளா் ஆகிய 2 ஆண்டு தொழிற்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.

 

www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment