முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, September 2, 2022

பெரியார், அண்ணா ஆகியோர் பிறந்தநாளையொட்டி பேச்சுப் போட்டிகள்; முதல் பரிசு ரூ.5 ஆயிரம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியார், அண்ணா ஆகியோர் பிறந்தநாளையொட்டி செப்.15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பெரியார், அண்ணா ஆகியோர் பிறந்த நாளையொட்டி செப். 15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.

 


ராமநாதபுரம் வெளிப்பட்டினம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அன்றைய தேதிகளில் காலை 8.30 மணிக்குத் தொடங்கும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு

முதல் பரிசு ரூ.5 ஆயிரம்,

இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம்,

மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம்

வழங்கப்படவுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலும், 9952280798 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.