முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, March 3, 2023

கீழக்கரை அரசு மருத்துவமனையை மேம்படுத்த அமைச்சரிடம் மனு!!

No comments :

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதி தாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தை திறந்து வைப்ப தற்கு வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனை, காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

 


அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

 

கீழக்கரை அரசு ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த நிலையில் கீழக்கரை சுற்று வட்டார பகுதி மக்கள் மருத்துவத்துக்கு இங்கு வந்து சென்றனர். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோதே பணியாளர்கள், உபகரணங்கள் பற்றாக்குறையாக இருந்தது. தற்போது தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் இதே நிலை நீடித்து வருகிறது. 


எனவே ஆஸ்பத்திரியை மேம்படுத்தி புதிய கட்டிடம் அமைத்து தரவும், தளவாடப்பொருட்கள் மற்றும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனு வில் குறிப்பிட்டுள்ளது. 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.