(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 22, 2024

சவுதி அரேபியாவில் நடைபெற்ற கீழை-சவுதி அமைப்பின் மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு!!

No comments :

கீழை சவுதி அமைப்பின் சார்பாக, கீழக்கரை மக்களின் ஒன்றுகூடல், சவுதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் சிறப்பாக நடந்தேறியது.

 




இந்த நிகழ்வில், அமைப்பின் கவுரவ தலைவர் ஜனாப்.முகைதீன் சீனி அலி அவர்கள் தலைமை வகிக்க, இதர உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

 

நிகழ்ச்சியை கீழை.இர்ஃபான் அவர்கள் கிராஅத் ஓத துவங்கி வைத்தார். முகைதீன் சீனி அலி அவர்கள் நமது அமைப்பின் நோக்கம் மற்றும் ஊர் மக்கள் ஒற்றுமை பற்றி தலைமையுரை ஆற்றினார்கள். ஜனாப்.தாஹிர் மற்றும ஜனாப்.ஆசிம் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினர்.

 


இதில் சவுதியில் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் சகோதரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த பாரம்பரிய மதிய உணவு வகைகளுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment