முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, May 23, 2025

கீழக்கரை நகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கததைக் கண்டித்து சுயேச்சை உறுப்பினர் பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நகர்மன்றக் கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.

 

கீழக்கரை நகாட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் ரூ. ஒரு கோடி மதிப்பிட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பணிகள் தொடங்கப்படவில்லை.

 

இந்த நிலையில், நகர்மன்ற மாதாந்திர சாதாரணக் கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு நகர் மன்றத் தலைவர் செகனாஸ் ஆபிதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். நகர் மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 


இந்தக் கூட்டத்தில், ஒன்றாவது வார்டு சுயேச்சை உறுப்பினர் முகம்மது பாதுஷா தனது வார்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், கழிவு நீர்க் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தார்.

 

மேலும், தனது வார்டு பொதுமக்களுடன் இணைந்து நகராட்சி நிர்வாகத்தைத் கண்டித்து, அலுவலக வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.