முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 10, 2016

உதயமானது மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி!!

No comments :
தேமுதிக-விலிருந்து வெளியேறிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். 

சென்னை தி.நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சந்திர குமார் தலைமையில் இன்று போட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. விஜயகாந்த் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில்சந்திர குமார் போட்டிப் பொதுக்குழு கூட்டம் நடத்தினார்.




இந்த பொதுக்குழு கூட்டத்தில்தான் சந்திரகுமார் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்தார். மேலும் அவர் பேசும்போது, தேமுதிக-வை உடைக்கும் எண்ணமில்லை என்றார்.

தேமுதிக-வை உடைக்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது, தமிழகத்தில் அதிமுக அரசை அகற்றுவதற்காக மக்கள் தேமுதிக உருவாக்கப்பட்டுள்ளது. 


விஜயகாந்தை குறைசொல்ல மாட்டோம். வைகோ-வைப் போன்ற எண்ணம் எங்களுக்குக் கிடையாது. தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது வருத்தமளிக்கிறதுஎன்றார்.

மக்கள் நலக்கூட்டணியுடன் தேர்தல் கூட்டணி அமைத்ததற்காக தேமுதிக-வையும், பிரேமலதாவையும் கடுமையாக விமர்சித்ததையடுத்து சந்திரகுமார் எம்.எல்.ஏ உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தேமுதிக அடிப்படை உறுப்பினர் அடையாளத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டார் விஜயகாந்த். 

இதனையடுத்து தேமுதிக முழுக்கவும் பிரேமலதா கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது என்று விமர்சித்தார் சந்திரகுமார். 

இந்நிலையில் இன்று மக்கள் தேமுதிக என்ற கட்சி உதயமாகியுள்ளது.


செய்தி: தி ஹிந்து

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

திருவாடானை தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார் நடிகர் கருணாஸ்!!

No comments :
திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நடிகர் கருணாஸ் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் தொடங்கினார்.

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும் நடிகருமான கருணாஸ் போட்டியிடுகிறார். அவர் சனிக்கிழமை திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று சாமி கும்பிட்டார்.


அவருடன் மாவட்ட கவுன்சிலர் ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் வது.நடராஜன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் கணேசன், ஒன்றிய துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் திருவாடானை சன்னதி தெருவில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்குச் சென்றனர். அந்த அலுவலகத்தை அன்வர்ராஜா எம்.பி திறந்து வைத்தார்.

பின்னர் வேட்பாளர் கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதில், அதிமுக அவைத் தலைவர் முருகன், திருவாடானை ஒன்றிய செயலாளர் மதிவாணன், ஒன்றிய குழு தலைவர் முனியம்மாள் ரஜேந்திரன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செங்கை ராசு, வழக்குரைஞர் ராஜலிங்கம், ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் நெல்சன், பழயனக்கோட்டை பாண்டி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)