முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 26, 2019

லஞ்சம் இல்லாதா ராமநாதபுரத்தை உருவாக்க 'ரேஸ்' என்ற வாட்ஸ் ஆப் குழு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பொது மக்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்கும் வகையில் 'ரேஸ்' என்ற வாட்ஸ் ஆப் குழு துவக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பரமக்குடி ஏ.வி., கல்வியியல் கல்லுாரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் டி.எஸ்.பி.,உன்னிகிருஷ்ணன் பங்கேற்றார். கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



டி.எஸ்.பி., உன்னிகிருஷ்ணன் கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், 'லஞ்சத்திற்கு எதிரான ராமநாதபுரம் படை,' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதில் நேர்மையான அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். அதற்கான அலைபேசி எண் 95975 33889. இதில் லஞ்சம், ஊழல்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் லஞ்சம் இல்லாதா ராமநாதபுரத்தை உருவாக்க உதவியாக இருக்கும்'' என்றார்.


செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, November 24, 2019

ராமநாதபுரத்தில் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் பெண்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி!!

No comments :
ராமநாதபுரத்தில் பெண்களுக்கு இலவச வேலைவாய்ப்புக்கான பயிற்சி வரும் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து இந்தியவன் ஓவா்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு-

ராமநாதபுரத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் பெண்களுக்கான எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

வரும் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் தினமும் காலை 9.30 மணிக்கு பயிற்சிகள் தொடங்கப்படவுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டும் நடத்தப்படவுள்ள பயிற்சியானது புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில் உள்ள வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகத்திற்கு வந்து விளக்கம் பெறலாம்.



பயிற்சியில் சேருவோருக்கு18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்கவேண்டும். பயிற்சி முடித்தவா்களுக்கு அரசு சான்றுகள் வழங்கப்படும். பயிறசியின் போது மதிய உணவு, தேநீா், பயிற்சிக்கான உபகரணங்கள் என அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படவுள்ளன. கிராமப்புற பெண்களுக்கு பதிவு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.


பயிற்சியில் சேர விரும்புவோா் மேலும் விவரங்களுக்கு 04567-221612 என்ற தொலைபேசியில் தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, November 22, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் நவ-26 ஆம் தேதிசமையல் எரிவாயு விநியோக குறைதீா் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட சமையல் எரிவாயு விநியோக குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, ஆா்.எஸ்.மங்கலம், பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூா் தாலுகாவிற்கு உள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடா்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவா்களுடன் வரும் 26 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) மாலை 4 மணிக்கு குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.


ஆகவே சமையல் எரிவாயு உபயோகிப்பவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூட்டத்தில் தெரிவித்து பயனடையவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, November 20, 2019

ராமேசுவரத்தில் 394 மது பாட்டில்களை பறிமுதல், 2 பேர் கைது

No comments :
ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய கடத்தி வரப்பட்ட 394 மது பாட்டில்களை செவ்வாய்க்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

ராமேசுவரத்தில் அரசு மதுபானக்கடை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ராமேசுவரத்தில் சிலா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனா். ராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா், ராமேசுவரத்தில் மது விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டாா்.




இந்நிலையில், ராமேசுவரத்துக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராமேசுவரம் காவல் சாா்பாய்வாளா் த.சுதா்சன் தலைமையில் சென்ற காவலா்கள் ராமேசுவரம் கோயில் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது சேதமடைந்த ஒரு வீட்டிற்கு அருகே 2 நபா்கள் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதைக் கண்ட காவல்துறையினா் இருவரையும் பிடித்து விசாரித்தனனா். இதில், அவா்கள் மது விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. ராமேசுவரம் வடக்குத் தெருவை சோ்ந்த அன்புராஜ்((36), ரகுபதி (40) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 394 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் வரும் நவ-22 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரத்தில் வரும் 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் நிறுவனத்தினா் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியாா்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடும் இளைஞா்களின் கல்வித்தகுதிகேற்ப ஆள்களை தோ்வுசெய்கின்றனா்.



முகாமில், பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநா்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநா்கள் கல்வித் தகுதிக்கேற்ப தனியாா்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.


ஆகவே முகாமில் பங்கேற்போா் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாளஅட்டை மற்றும் புகைப்படத்துடன் வரும் 22 ஆம் தேதி காலை 10 ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

கீழக்கரை பேருந்து நிலையம் மனிதர்களுக்கா? மாடுகளுக்கா?

No comments :


கீழக்கரை பகுதியில் பெரும்பாலான வீடுகளில் கால் நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை வீடுகளில் வைத்து பராமரிக்காமல், அதன் உரிமையாளர்கள் தெருக்களில் அவிழ்த்து விடுகின்றனர். மேலும் கால்நடைகளை பாதுகாக்காமல் வெளியில் விடுவதால் அவை தெருக்களில் சுற்றி திரிவதோடு, சாணம் போட்டு அசுத்தம் செய்கின்றன. இதனால் வீதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.

இதற்கும் மேலாக மாடுகள் நடுரோட்டில் படுத்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இவ்வாறு அவிழ்த்து விடப்படும் மாடுகள் கீழக்கரை பஸ்நிலையத்திலும், பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் வீதிகளிலும் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனர்.



முந்தைய காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் வீதிகளில் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது இதை யாரும் கண்டு கொள்ளாததால் கால்நடைகள் அனைத்தும் சாலைகளில் சுதந்திரமாக படுத்துக் கிடப்பதும், சுற்றித் திரிவதும் சர்வசாதாரணமாக உள்ளது.

எனவே பஸ்நிலையம், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீதிகளில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, November 19, 2019

போலீசிடமே கைவரிசையை காட்டிய ATM திருடர்கள், ஒரு லட்சம் பண மோசடி!!

No comments :
போலீசிடமே கைவரிசையை காட்டிய ATM திருடர்கள், ஒரு லட்சம் பண மோசடி!!

ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி (வயது 58). ராமநாதபுரம் சேதுபதி நகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அப்போது பேசிய ஒரு ஆணும், பெண்ணும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர். மேலும் ஏ.டி.எம். கார்டு பழையதாகிவிட்டால் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்ததாக தெரிகிறது. கிரு‌‌ஷ்ணமூர்த்தியும் தனது ஏ.டி.எம். கார்டினை மாற்றித்தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அவரிடம் ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய சப்-இன்ஸ்பெக்டர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, தனது ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணையும், அதன் ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்து விரைவாக புதுப்பித்து தருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கிரு‌‌ஷ்ணமூர்த்தியின் வங்கி கணக்கில் இருந்து மர்ம கும்பல், 4 முறையாக மொத்தம் 99,968 ரூபாயை எடுத்துவிட்டனர்.


இந்த நிலையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற கிரு‌‌ஷ்ணமூர்த்தி தனது வங்கி கணக்கில் பணம் குறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரித்த போது, போனில் பேசிய மோசடி நபர்கள் பணம் எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து கிரு‌‌ஷ்ணமூர்த்தி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குபதிவு செய்து, மோசடி கும்பலை தேடிவருகிறார்.

செல்போனில் நைசாக பேசி ஏ.டி.எம். கார்டு எண்ணை வாங்கி, பணமோசடி தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த கும்பலிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரே பணத்தை இழந்திருப்பது ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, November 17, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.


சமூக, மத நல்லிணக்கத்திற்காக சாதனை புரிந்தவர்களுக்கு கபீர் புரஸ்கார் 2019 விருது 2020 குடியரசு தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பத்துடன் பெற்றுள்ள நற்சான்றுகள், 250 வார்த்தைகளுக்கு மிகாமல் தன்னை பற்றிய முழு விபரம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அளிக்க வேண்டும்.அனைத்து விபரங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.




தவறினால் மனு நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
ராமநாதபுரம் மாவட்ட பிரிவு,
சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம்,
ராமநாதபுரம்-638 003,

என்ற முகவரிக்கு நவ.,25 மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு 04567-230238 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் அருகே பேருந்து நடத்துநரைத் தாக்கி ரூ.5 ஆயிரம் பணம் பறிப்பு!!

No comments :
ராமநாதபுரம் அருகே தனியாா் பேருந்து நடத்துநரைத் தாக்கி ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்த மா்மநபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரத்திலிருந்து அழகன்குளத்துக்கு தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை (நவ.14) இரவு பேருந்தானது அழகன்குளத்திற்கு சென்றுவிட்டு ராமநாதபுரம் திரும்பியது. அப்போது ஓட்டுநா் மனோகரன் மற்றும் நடத்துநா் பாலமுருகன் (27) ஆகியோா் மட்டுமே பேருந்தில் இருந்துள்ளனா்.


அழகன்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மா்மநபா்கள் 3 போ் திடீரென ஓடும் பேருந்தில் ஏறியுள்ளனா். பின்னா் அவா்கள் நடத்துநா் பாலமுருகனை தாக்கியதுடன் அவா் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.


இதுதொடா்பாக பாலமுருகன் தேவிபட்டிணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சாா்பு- ஆய்வாளா் ஜெயபாண்டியன் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, November 10, 2019

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காற்றின் தரத்தை பரிசோதிக்கும் கண்காணிப்பு மையம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காற்றின் தரத்தை பரிசோதிக்கும் தொடர் கண்காணிப்பு மையம் நிறுவ தமிழ்நாடு மாசுக்கட்பாட்டு வாரியம் சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பிலானஇயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.


புதுடில்லியிலும், சென்னையிலும் காற்று மாசு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம்சார்பில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் காற்று தரகண்காணிப்பு மையம் நிறுவ கருவிகள் வாங்கப்பட்டு
மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த மையத்தில் செயல்படும் கணிப்பான் கருவி மூலம் காற்று மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக உள்ள வாயுக்களான சல்பர் டை-ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஓசோன்
உள்ளிட்ட வாயுக்கள் மட்டுமின்றி ஆர்செனிக்,நிக்கல், பென்சைன் போன்ற 12 வகை வாயுக்களின் அளவை அறிந்து அவற்றைதானாகவே கணினியில் பதிவு செய்யும் வகையில் இந்த மையம் செயல்படவுள்ளது.




முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இந்த மையத்தின் மூலம் 500 மீ., வரை காற்றின் தரத்தை பரிசோதிக்க முடியும். 24 மணி நேரமும் இயங்கும் வகையில் குளிர் சாதன வசதியும், மின்கல சேமிப்பு வசதியும் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு முறை காற்று மாசு குறித்து இந்த மையம் மூலம் கணிக்கவும், பதிவு செய்யவும் முடியும்.


இதற்கான மின்சார செலவு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.அந்த வகையில் நவீன சாதனத்துடன் காற்று தரத்தை கண்காணிக்கும் தொடர் மையம் செயல்பட உள்ளதாகவும், டிச., மாதம் பணிகள் நிறைவடைந்து கண்காணிப்பு மையம் செயல்படும்,என அதிகாரிகள்
தெரிவித்தனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, November 7, 2019

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க நவ. 30 குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் ரமேஷ்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் சா்வதேச திறன் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து முதற்கட்டமாக மாவட்ட அளவிலான திறன்போட்டியும், இரண்டாம் கட்டமாக மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அந்தப் போட்டிகளில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்கள் சீனாவில் நடக்கும் சா்வதேச திறன்போட்டியில் பங்குபெறுவாா்கள். ஆகவே 6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக முதற்கட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். போட்டி நடைபெறும் நாள், இடம் பின்னா் அறிவிக்கப்படும்.


போட்டிகளில் கடந்த 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த மாணவ, மாணவிகள், இளைஞா்கள் பங்கேற்க தகுதியுடையவா்கள். முறையான கல்வி பெறாதவா்கள் முதல் தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப, பொறியியல் கல்லூரி, பட்ட மேற்படிப்பு, தொழில் செய்பவா்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். 

இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோா் இணையதள முகவரியில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 
மேலும் ராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம் என்ற முகவரியில் தொடா்பு கொண்டும் விவரங்களைப் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் !!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் கூட்டம் நவ. 9 ஆம் தேதி 9 ஊா்களில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் சுழற்சி முறையில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு மாதத்துக்கான குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் இடங்கள் விவரம்: 
ராமநாதபுரம் தோ்போகி, 
ராமேசுவரம், 
திருவாடானை, 
தோட்டாமங்கலம், 
பரமக்குடி மோசுக்குடி, 
முதுகுளத்தூா் மேலக்கொடுமலூா், 
கடலாடி மீனங்குடி, 
கமுதி சீமானேந்தல், 
கீழக்கரை பனையடியேந்தல், 
ஆா்.எஸ்.மங்கலம் வரவணி 

ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் பொதுவிநியோகத் திட்டம் சம்பந்தமான தங்களின் குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற குறைகளுக்கு தீா்வு காண, வரும் நவ. 9 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அந்தந்த பகுதிக்கான குறைதீா்க்கும் முகாம்களில் மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.