முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 31, 2015

துபாய் IATA நிறுவனத்தின் பல்வேறு வேலை வாய்ப்புகள்!!

No comments :

Travel Accountant, Ticketing, Telemarketing, Part time marketing Executives

Details: Posted on: 12th May 2015





Company Name:IATA Travel Agency Dubai
Employment Type:Full Time
Monthly Salary:Unspecified
Minimum Work Experience:1-2 Years
Minimum Education Level:Bachelors Degree
Listed By:Employer
Company Size:11-50 Employees
Career Level:Mid-level



Description:

Experienced Travel Accountant, Ticketing ,Telemarketing and Part time marketing Executives required urgently Please rush your cv to traveljob.dubai at gmail.com, Please dont send cv if you are not available in UAE.

TO APPLY: 
CLICK HERE





"கல்வி & தொழில் வழிகாட்டி” புத்தக வெளியீட்டு விழா படங்கள்!!

No comments :
சென்னையில் நடந்த "கல்வி & தொழில் வழிகாட்டி” புத்தக வெளியீட்டு விழா படங்கள்!!

ஹாஜி.S.M. சலாஹுத்தீன், ஹாஜி. P.S.M. ஹபீபுல்லாஹ், திரு. ஞானதேசிகன், ஹாஜி.அக்பர்கான், திரு.ஹிதாயத்துல்லாஹ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



நன்றி: திரு.ஃபைசுர்ரஹ்மான்.
நூலாசிரியர்.

Saturday, May 30, 2015

துபாய் Boeing விமான நிறுவனத்தில் Field Service Associate \ Office Administrator வேலை வாய்ப்பு!!

No comments :
Field Service Associate \ Office Administrator
Boeing - Dubai

Boeing is seeking a Field Service Associate to support its growing requirements in a customer support office in Dubai. You will be a key member of the Field Service team, providing administrative and customer support to facilitate on-site Field Service activities. In this role, you will interact with Boeing personnel, customer personnel in a fast pace environment.

As a Field Service Associate your role is to perform the office administrative tasks to allow the Field Service personnel to concentrate on customer airline problems. The duties and & responsibilities include (but not limited to):

  • Office reception
  • Follow administrative processes and procedures contained in the Field Service Procedures Manual and Base Procedures Manual. Research and compose reports, technical data and reliability reports. Stay current with Boeing Communication System. Assist in establishing administrative processes and procedures. Compose office reports and other correspondence to both Boeing and the customer. Use advanced features of computer software programs (e.g. Powerpoint, Excel, MSWord and Boeing Communication System).
  • Maintain office equipment, inventory control, record keeping , office up-keep
  • Perform expense reporting for the local Field Service team and broader field service team
  • Coordinate and support visiting Boeing personnel
  • Translate, comprehend and provide answers/solutions as necessary from local language to English including use of technical terminology. Communicate effectively with customers
  • Work under general supervision to assist internal and external customers with answers or information of a routine nature. Find solutions to a variety of problems of moderate scope and moderate complexity following established policies and procedures utilizing internal company information resources
  • Acts as on-site representative in the absence of the assigned Technical Representative on a temporary basis at the customer's location
  • Provide basic document and on-line training (e.g. myboeingfleet, Boeing Communication System, Technical In- Service Request) for internal and external customers
  • Work with base personnel in coordinating and organizing events (e.g. regional meetings, conferences) as required.
  • Other duties and responsibilities as assigned by management.
This requisition is for an international, locally hired position in Dubai, United Arab Emirates. Benefits and pay are determined at the local level and are not part of Boeing U.S.-based payroll, and will be commensurate with experience and qualifications and in accordance with applicable UAE law. Employment is subject to the candidate s ability to satisfy all UAE labor and immigration formalities. This job may be level C or level D and will determined by the level of experience and qualifications of the selected candidate, in relation to the scope and responsibility of the position.

Qualifications

  • Relevant experience
  • Exhibit an outstanding Customer Service attitude
  • Be flexible to changing schedules and requirements
  • Excellent organizational skills, effective multi-tasking ability, and able to meet tight deadlines. Strong computer skills, able to use Microsoft Office (Word, Excel, Powerpoint) effectively. Willingness to learn new software systems as required. Strong oral and written English language skills
  • Ability to work in a team environment, being co-located with the team
  • Preference for those familiar with the aviation industry
  • This requisition is for an international, locally hired position. Benefits and pay are determined at the local level and are not part of U.S.-based payroll. Relocation benefits are available
Other Job Related Information

Experience Level: Individual Contributor

Job Type: Full-time

Travel: No

Relocation Authorized?: Yes

Business Unit: COMMERCIAL AIRPLANES

Contingent Upon Program Award?: No

Union: No

Job Code: GEC9XC

TO APPLY: CLICK HERE

சவூதி வாழ் இந்திய தொழிலாளர்களின் கவனத்திற்கு!

No comments :



சவூதி வாழ் இந்திய தொழிலாளர்களின் கவனத்திற்கு!
எனதருமை சவூதி வாழ் தொழிலாளர் சொந்தங்களே,நாம் பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி நமது தாய்,தந்தை,மனைவி,பிள்ளைகள்,உறவுகளை பிரிந்து உழைக்க வந்துள்ளோம்.
நம்மை சுற்றி ஒருசில நேரத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதுண்டு.அது நமக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.
ஆனாலும் நம்மில் சிலபேர் அதை பற்றியே பெரிய அளவில் உடனிருப்போரிடமும்,அலைபேசி வாயிலாக தமது குடும்பத்தாருடனும் விவாதிப்பதுண்டு.

சிலநேரத்தில் இதுவே நமக்கு எதிராகவும் திரும்பிவிடும்.அதனால் நமது நிம்மதி சீர்குலைந்து தேவையற்ற பிரச்சினைகளை சுமக்க நேரிடும்.
நமது உறவுகளை தவிர்த்து வேறு யாரிடமும் நமது செல்போனை கொடுத்துவிடக் கூடாது.
யாராவது ஒருவர் நமது செல்போனில் மிஸ்டுகால் கொடுக்க சொல்லியோ,ஒரு SMS அனுப்ப சொல்லியோ போன் கேட்டால் கொடுத்து அபாயகரமான சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்.
சவூதியை சுற்றியுள்ள ஒருசில நாடுகளில் விரும்பத்தகாத உள்நாட்டு கலவரம் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் யாராவது ஒருவர் நமது செல்போன் மூலம் சவூதி அரசுக்கு எதிரான வார்த்தைகளை உரையாடல் மூலமோ அல்லது SMS மூலமோ பரப்பி விட்டால் அதன் பாதகமான முடிவுகள் யார் பெயரில் சிம் கார்டு உள்ளதோ அவர்களையே சேரும்.
இதே போன்றுதான் பேஸ்புக்,வாட்ஸப் போன்றவையும்.நமது செல்போனிலிருந்து ஏதேனும் ஒரு சட்டவிரோத தகவலை மற்றவருக்கு அனுப்பிவிட்டாலும் அதற்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்.
நமது செல்போன் தொலைந்து விட்டாலோ?அல்லது யாரேனும் களவாடி விட்டாலோ?சிறிதும் தாமதமின்றி அருகில் உள்ள சிம்கார்டு நிறுவனத்தில் புகார் அளித்து அதன் செயல்பாட்டை முடக்கி விடவேண்டும்.
வளைகுடாவில் பாதிக்கப்பட்ட ஒருவரின் அழுகுரலிலிருந்து கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

இறைவன் நம் அனைவரையும் இதுபோன்ற இக்கட்டிலிருந்து பாதுகாப்பானாக ஆமீன்.

தகவல்:கீழை ஜஹாங்கீர் அரூஸி


மாசு என்கிற மாசிலாமணி - தமிழ் திரை விமர்சனம்

No comments :
நடிப்பு: சூர்யா, பிரேம்ஜி, நயன்தாரா, ப்ரணிதா, சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
எழுத்து - இயக்கம்: வெங்கட்பிரபு

இன்றைய பேய்க் கதை ட்ரெண்டைப் பயன்படுத்தி வெங்கட் பிரபுவும் சூர்யாவும் ஒரு மாஸ் பேய்ப் படத்தைத் தர முயன்றிருக்கிறார்கள். பேய்கள் என்றாலே பயம், பயங்கரம் என்ற நினைப்பை மாற்றி, அவற்றை தோளில் கைபோட்டு நட்பு பாராட்டும் தோழர்களாகக் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.


கதை.. ரொம்ப சிம்பிள்.. பழசும் கூட. தன் குடும்பத்தை அழித்தவர்களை, மகன் வளர்ந்து பழிவாங்குகிறான் என்ற ஒற்றை வரிக் கதையை, பேய்கள் மற்றும் தனது வழக்கமான துருப்புச் சீட்டு பிரேம்ஜியைக் கொண்டு கலகலப்பாகவும் உருக்கமாகவும் தந்திருக்கிறார் வெங்கட் பிரபு. நண்பன் பிரேம்ஜி துணையுடன் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து கொண்டு, நயன்தாராவை லவ்விக் கொண்டிருக்கும் சூர்யா, ஒரு பெரிய திருட்டின் போது கார் விபத்தில் சிக்குகிறார். தலை பட்ட அடியால் அவருக்கு ஒரு புது சக்தி கிடைக்கிறது. ஆவி, பேய்களைக் காணும் சக்தி. அந்தப் பேய்களை வைத்தே கொஞ்ச காலம் பிழைப்பை ஓட்டுகிறார். பேய்கள் தங்கள் நிறைவேறாத ஆசைகளை சூர்யா மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகின்றன.


அப்போதுதான் தன்னைப் போன்ற உருவ அமைப்புடன் உள்ள ஒரு பேய் (இன்னொரு சூர்யா) அவரிடம் வருகிறது. அந்தப் பேய் சிலரைப் பழி வாங்க மனித சூர்யாவைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது புரிந்து அந்தப் பேயை விரட்டியடிக்கிறார் சூர்யா. உடனிருக்கும் மற்ற பேய்களின் இறுதி ஆசைகளை நிறைவேற்றுகிறார். சூர்யா விரட்டியடித்த பேய் யார்? எதற்காக அந்தப் பேய் சூர்யா மூலம் சிலரை போட்டுத் தள்ளுகிறது? என்பதெல்லாம் திரையில் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.

வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், அதை கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. சம கால சினிமா, அதில் வந்த பாத்திரங்கள், காட்சிகளையெல்லாம் சூழலுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் விபத்து மற்றும் ஜெய் பாத்திரத்தைப் பயன்படுத்திய விதம், க்ளாமாக்ஸ் சண்டையில் பார்த்திபனைப் பார்த்து கருணாஸ் கூறும் அந்த ஒற்றை வசனம், படம் முழுக்க வரும் பிரேம்ஜியின் டைமிங் வசனங்கள்.. -வெங்கட் பிரபுவின் அக்மார்க் பார்முலா இது.

ஈழத்துக்கு இளைஞராக வரும் இன்னொரு சூர்யா, மண்ணைப் பிரிந்து அயல்நாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழனின் பிரதிநிதியாக ஜொலிக்கிறார். 'அயல்நாட்டில் வாழும் தமிழன் சொந்த மண்ணுக்கு வந்தால் ஊரைச் சுற்றிப் பார்த்து போட்டோ புடிச்சிக் கொண்டு போயிடுவான்னு நினைச்சியா?' என்ற வசனம் இன்றைய நிலையின் நிதர்சனம். சூர்யாவை அத்தனை பரிமாணங்களிலும் ஜொலிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஒரு ஜாலி திருடனாக, தன்னை வைத்து பழிவாங்கும் தன் உருவ பேயிடம் சீறும் சிங்கமாக, இருபது முரடர்கள் மல்லுக் கட்ட அவர்களை வெளுத்து வாங்கும் அதிரடி நாயகனாக, துறுதுறு காதலாக, அன்பான கணவனாக.. இறுதியில் வெகுண்டு எழும் கோபக்கார மகனாக... மனசை அள்ளுகிறார் மனிதர்.

பிரேம்ஜிக்கும் சூர்யாவுக்குமான நட்பு அருமை. உனக்கு என்னடா கடைசி ஆசை என பிரேம்ஜியிடம் கேட்க, அதற்கு அவர் தமாஷாகத் தரும் பதில் மனசைப் பிசையும் காட்சி. நாயகிகளில் நயன்தாரா சும்மா ஒப்புக்கு வந்து போகிறார். அவரது நர்ஸ் வேடம் ஒரே ஒரு காட்சிக்குதான் ரொம்ப உதவியாக இருக்கிறது.

ப்ரணிதாவின் அழகும், அந்த அகன்ற விழிகளில் கண்களில் வழியும் காதலும் ரசிக்க வைக்கின்றன. இருவரின் மகளாக வரும் அந்த சுட்டிப் பெண் ஒரு கவிதை. சின்னச் சின்ன விஷயங்களில் கூட அத்தனை சிரத்தை காட்டியுள்ள வெங்கட் பிரபு, ரசிகர்களை கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலோ என்னமோ இரு பெரிய தவறுகளை சரிப்படுத்தாமலே விட்டிருக்கிறார்.

பேய்களால் எந்தப் பொருளையும் தொட முடியாது.. எதுவும் செய்ய முடியாது என்பதை ஆரம்பத்தில் சொல்லும் அவர், பின்னர் அதே பேய்கள் கிரேனை இயக்குவது போலவும், கன்டெய்னர் கதவுகளை தூக்கி அடிப்பதுபோலவும் காட்டியிருக்கிறார்.

ஒரு விபத்தில் வந்த பேய்களைக் காணும் சக்தி, அடுத்த விபத்தில் போயிடுச்சி என்ற மெகா காமெடி வசனத்தை சூர்யாவை விட்டு சீரியசாகப் பேச வைத்திருக்கிறார். 'ஒண்ணுமே புடுங்கலன்னு யாரும் சொல்லிடக் கூடாதில்ல..' என்று பஞ்ச் அடித்தபடி, கைதியின் கண்ணாடியைப் பிடுங்கி, அதை சக போலீசிடம் லஞ்சமாகத் தரும் பார்த்திபன் வரும் காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும், அவரை இன்னும்கூட சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம். சமுத்திரக்கனியை இத்தனை கொடூர வில்லனாகப் பார்க்க முடியவில்லை. ஜெயப்பிரகாஷ், ராஜேந்திரன், ரியாஸ், கருணாஸ், ஸ்ரீமன், சண்முகசுந்தரம், ஞானவேல் என அத்தனைப் பேரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

படத்துக்கு பெரிய பலம் ராஜசேகரின் ஒளிப்பதிவும், யுவனின் இசையும். குறிப்பாக பின்னணி இசை. வெங்கட் பிரபுவிடம் பிடித்த விஷயமே, வழக்கமான விஷயத்தைக் கூட ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றித் தரும் புத்திசாலித்தனம்தான். அது இந்தப் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸான மாதிரி தெரிந்தாலும், ஒரு முறை ரசித்துப் பார்க்கும்படியான படம்தான் இந்த மாசு!

விமர்சனம்: இன் இண்டியா

Friday, May 29, 2015

சவுதி அரேபிய தம்மாம் நகரில் இன்று (29-5-2015) குண்டு வெடிப்பு!!

No comments :
சவுதி அரேபிய தம்மாம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் வெளியே ஜும்மாவின் பின்னர் குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிவாயலின் வெளியில் உள்ள கார் பார்க்கில் நடந்த இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்த பட்சம் நான்கு பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.







செய்தி: மடாலட நியூஸ்

மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்த இராமநாதபுர மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு!!

No comments :
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்த விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவிக்கு, ரூ. 1 லட்சம் பரிசாக  வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் கீழ் இயங்கி வருகிறது ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி. இங்கு பயின்ற இப்பகுதியைச் சேர்ந்த மாணவி நித்யஸ்ரீ, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து, மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.


இதையடுத்து, பள்ளிக்குப் பெருமை சேர்த்ததற்காகவும், மற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பள்ளி நிர்வாகம் மாணவி நித்யஸ்ரீக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலை வழங்க முடிவு செய்திருந்தது. அதன்பேரில், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் சுவாமி சதானந்தா மஹராஜ், வியாழக்கிழமை மாணவி நித்யஸ்ரீயிடம் காசோலையை வழங்கிப் பாராட்டினார்.   

மேலும், மாணவியின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் முன்னாள் முதல்வர் ஜெயமணி, முதல்வர் சுரேஷ்குமார், துணை முதல்வர்கள் சங்கரலிங்கம், ஸ்ரீராம் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கும், பள்ளி நிர்வாகம் சார்பில் வாழ்த்து தெரிவித்து கௌரவிக்கப்பட்டனர்.    இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் சுவாமி ருத்ரானந்தா, பள்ளியின் முன்னாள் தாளாளர் சுவாமி சாரதானந்தா மற்றும் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


செய்தி: தினமணி

Thursday, May 28, 2015

துபாய் Hyatt குழுமத்தில் Sales Coordinator வேலை வாய்ப்பு!!

No comments :

Sales Coordinator 
Hyatt - Dubai





DUB001889

Description

You will be responsible to provide an excellent and consistent level of service to your customers. The Sales Coordinator is responsible to assist operationally and administratively in the achievement of department’s pre-determined sales and revenue targets for both Hyatt Places in Dubai.

Qualifications

Ideally with a relevant degree or diploma in Hospitality or Tourism management.

Minimum 2 years work experience hotel operations.

Good customer service, communications and interpersonal skills are a must.

Primary Location

:

AE-DU-Dubai

Organization

:

Hyatt Place Dubai/Al Rigga

Job Level

:

Entry Level Manager

|

Full-time

Job

:

Sales

TO APPLY: CLICK HERE

மதுவுக்கு எதிரான மாணவர்ப்போராட்டம் – சகோதரி நந்தினி அறிக்கை!!

No comments :


தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடியால் அப்பாவை பறிகொடுத்த மாணவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். மேலும் குடியால் வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகளால் படிப்பு பாதிக்கப்பட்டு உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை பெரும்பாலான மாணவர்கள் சந்திக்கின்றனர். அதுமட்டுமல்லாது பள்ளி மாணவர்கள் கூட குடிபோதைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருகிறது.


தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்துள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்கு டாஸ்மாக்கை ஒழித்துக்கட்டும் அளவுக்கு தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கும் ஆற்றல் இல்லை. மொத்தத்தில் அடுத்த தலைமுறையைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மாணவர் சக்தி முழு ஆற்றலோடு போராட்டக்களத்தில் இறங்கினால் மட்டுமே டாஸ்மாக் கடைகளை ஒழித்துக்கட்டும் சூழ்நிலை உருவாகும். எனவே டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

01.06.2015 முதல் இப்பணியை தீவிரப்படுத்த உள்ளோம். அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தில் உண்மையான அக்கறை கொண்ட அனைவரும் சாதி,மதம்,கட்சி போன்ற குறுகிய எல்லைகளைக் கடந்து இம்முயற்சியில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்-

இப்படிக்கு,ஆ.நந்தினி,சட்டக்கல்லூரி மாணவி மதுரை-9750724220


துபாய்-ல் வீட்டில் அத்துமீறி நுழைந்து மெத்தையில் தூங்கிய போதை வாலிபர் கைது. கிடைத்த வாய்ப்பில் “செல்ஃபி” எடுத்துக்கொண்ட பெண்!!

No comments :


தனது வீட்டில் திருட வந்த மர்ம நபர் படுக்கையறையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு கிடைத்த இடைவேளையில் ஒரு செல்ஃபி எடுத்திருக்கிறார் வெளிநாட்டுப் பெண் ஒருவர்.துபாயில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து காலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "துனிசியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் துபாயில் பணி புரிந்து வருகிறார். புர்துபாய் குடியிருப்பில் வசித்து வருகிறார். வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டுக்குள் சென்ற அவர் தனது படுக்கையறையில் போதையில் ஒரு நபர் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார். உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அந்த அதிர்ச்சியிலும் அவர் சற்று இளைப்பாறுதலை தேடியுள்ளார். நல்ல உறக்கத்தில் இருந்த அந்த அந்நியனுடன் ஒரு செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும், அந்த செல்ஃபிக்கு அவர் அளித்த விளக்கத்தில், "வீட்டுக்குள் நுழைந்ததும் என் படுக்கையறையில் குடிகாரர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன். அவர் என் வீட்டில் திருட முயற்சித்துள்ளார். ஆனால் அது நடைபெறவில்லை" என குறிப்பிட்டுள்ளார். இந்த செல்ஃபி இப்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.


சம்பவம் தொடர்பாக துபாய் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளது போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மர்ம நபர் திருடன் அல்ல. அவர் அந்த குடியிருப்பில் வேலை பார்க்கும் தனது நண்பனை பார்க்க வந்துள்ளார். வந்த இடத்தில் இருவரும் மது அருந்தி இருக்கின்றனர். பின்னர் துனிசிய பெண் பிளாட்டுக்குள் நுழைந்த அவர் அங்கேயே தூங்கிவிட்டார். அவரை கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

-    கலீஜ் டைம்ஸ்

ராமேசுவரம் -சென்னை ரெயிலில் பெண்கள் பெட்டியில் முதல் முறையாக சி.சி.டி.வி. காமிரா!!

No comments :
கொள்ளை மற்றும் ஈவ் டீசிங் குற்றங்களை தடுக்கும் வகையில் சென்னை–ராமேசுவரம் ரெயிலில் பெண்கள் பெட்டியில் முதல் முறையாக சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

ரெயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு கருதி, கார்டு பயணம் செய்யும் கடைசி பெட்டியின் முன்னதாக பெண்கள் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பெண்கள் பெட்டிக்குள் நுழைந்து பலாத்காரம், நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன.

கேரளாவில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்த ஒரு பெண், பலாத்காரம் செய்யப்பட்டு ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிக்கு கேரள நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. அத்துடன் ரெயிலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரையும் வழங்கி இருந்தது.

இந்த நிலையில் தேசிய பெண்கள் கமிஷன் விடுத்த வேண்டுகோளின்படி இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் பெண்கள் பெட்டியில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் உள்ள ரெயில்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.
தென்னக ரெயில்வேயில் முதல் முறையாக சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் பெட்டியில் சி.சி.டிவி. காமிரா பொருத்தப்பட்டது.

இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு போலீசார் கூறியதாவது:–
பெண்கள் பெட்டியின் 2 நுழைவு வாயில்களிலும் 2 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் காட்சிகள், கார்டு பெட்டியில் உள்ள கம்பியில்லா ஆண்டனா மூலம் சென்னை ரெயில்வே கட்டுப்பாட்டு மையத்தில் சேமிக்கப்படும்.

பெண்கள் பெட்டியின் நுழைவுவாயிலில் இக்காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் பெட்டிக்குள் நுழையும் வரை காமிரா முழுமையாக பதிவு செய்கிறது. இதனால் ரெயில்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விரைவில் கண்டறிந்து கைது செய்ய முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

செய்தி: தினசரி நாளிதழ்

தமிழகத்தில் அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே பாடப்புத்தகம்!!

No comments :

தமிழகத்தில் அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1–ந்தேதி திறக்கப்படுகிறது. பள்ளி திறக்கும் முதல் நாளே பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 40 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 10 ஆயிரம் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவமாணவிகளுக்கும் நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக ஆண்டு தோறும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுகின்றன.

1 முதல் 9 வகுப்புவரை படிக்கும் 45 லட்சம் மாணவமாணவிகளுக்கு இந்த வருடம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 52 லட்சம் பேருக்கு நோட்டு புத்தகங்களும் வழங்க தயாராக உள்ளன. 1 முதல் 8–ம் வகுப்பு வரை உள்ள 30 லட்சம் மாணவமாணவிகளுக்கு இலவச சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அரசு வழங்கும் பாடப்புத்தகம், நோட்டு புத்தகங்கள் மாணவர்கள் கையில் கிடைக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து மாவட்டத்திற்கும் பாடப் புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள், சீருடைகள் அனுப்பப்பட்டு அதனை தலைமை ஆசிரியர்கள் குடோனில் இருந்து பள்ளிக்கு எடுத்து சென்று விட்டனர். ஒரு சில பள்ளிகளில் நாளைக்குள் எடுத்து சென்று விடுவார்கள்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.சபீதா மற்றும் இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்று வருகின்றன. திங்கட்கிழமை பள்ளிகள் திறந்தவுடன் மாணவமாணவிகளுக்கு இவை அனைத்தும் வழங்கப்படும்.

செய்தி: பள்ளி கல்வி துறை

Wednesday, May 27, 2015

குவைத்-ல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு!!

No comments :
ரமளான் மாதத்தை முன்னிட்டு குவைத் அரசு அளிக்கும் இந்த சலுகையை அதிகமான நபர்களுக்கு கொண்டு சேர்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுகிறோம்.

நன்றி: குவைத் டைம்ஸ்

2015 ம் ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைகழகம்!!

No comments :



பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளின் டிசம்பர் மாத பருவத் தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதில் கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் ஆய்வு நிறுவனம் 98.33 தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி 93.36 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்திலும், ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்ப நிறுவனம் 92.68 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
முதல் 20 இடங்களைப் பெற்றுள்ள கல்லூரிகளில் 6 கல்லூரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 3 கல்லூரிகள் திருவள்ளூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளன. முதல் 20 இடத்தில் சென்னையில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே கல்லூரி மீனாட்சி சுந்தரராஜன் கல்லூரி. இதன் தேர்ச்சி சதவீதம் 85.18.
இந்தப் பட்டியலில் 89.1 தேர்ச்சி சதவீதம் பெற்று பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி 7-வது இடத்தை பிடித்துள்ளது.


இதுகுறித்து பிரின்ஸ் கல்வி நிறுவனங்கள் குழுமத் தலைவர் டாக்டர் கே.வாசுதேவன் கூறும்போது, ‘‘எங்கள் கல்லூரி தொடங்கியதில் இருந்தே முதல் 20 இடங்களில்தான் இடம்பெற்று வந்துள்ளது.
இம்முறை பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், டிசிஎஸ், சிடிஎஸ், இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் எங்கள் மாணவர்களுக்கு வேலை கிடைத்துக் கொண்டிருக்கிறது’’ என்றார்.


டாப் 10 கல்லூரிகள்

1. பிஎஸ்ஜி தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், கோவை
2. ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்
3. ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்ப நிறுவனம், காஞ்சிபுரம்
4. ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி
5. ராம்கோ தொழில்நுட்ப நிறுவனம், விருதுநகர்
6. ஸ்ரீசிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்
7. பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்
8. வின்ஸ் கிறிஸ்தவ மகளிர் பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி
9. ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, வேலூர்.
10. மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, சென்னை

முழு விவரங்களை www.annauniv.edu இணையதளத்தில் பெறலாம்.


செய்தி: தி ஹிந்து