முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 17, 2015

சிறுதானிய ஓட்டல் நடத்தும் எம்.இ., பட்டதாரி!

No comments :
          

ன்ஜினீயரிங்கில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, ஐ.டி.நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், குடும்ப எதிர் ப்பை மீறி, பிடிவாதமாக சமையல்காரனாகமாறியிருப்பது... ஆச்சர்ய செய்தி!



நம்மாழ்வார் அய்யாவின் தாக்கத்தால், படித்த இளைஞர்கள் பலர் இயற் கை வேளாண்மையை நோக்கி பயணப்பட்டது நல்விதை. அந்தப் பாதை யில்தான், எம்.இ., இன்ட்ரஸ்ட்ரியல் இஞ்சினீயரிங் முடித்துவிட்டு, இயற் கை வேளாண்மைக்கு ஆதரவாக சிறுதானிய சாப்பாடுகள், பலகாரங்களை விற்பனை செய்யும் திருவள்ளுவர் உணவகத்தை, சென்னை, பூந்தமல்லி அருகேயுள்ள கரையான்சாவடியில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்சுரேஷ்.

நல்ல உணவுக்கான வெற்றிடம் நம் சமூகத்தில் அதிகம். எவ்வளவு பணம் தந்தாலும் ஆரோக்கியமான உணவு என்பது குதிரைக் கொம்பாக இருக்கி றது. இந்த ஆதங்கமும் ஏக்கமும்தான் என்னை இந்தத் தொழிலுக்கு கொண்டுவந்தது. அடுப்பங்கரையில நின்னு கரண்டி பிடிக்கவா இன்ஜினீயரிங் படிச்ச?’ என்ற கேள்விகளைக் கடந்து, முதலில் விருகம்பாக்கத்தில் மிகச்சிறிய இடத்தில் திருவள்ளுவர் உணவகம்தொடங்கினேன்.

வரவேற்பு பெரிதாக இல்லை. மூன்று மாதத்தில் கடையை மூட வேண்டிய நிலை. இப்பவாவது புத்தி வந்துச்சா?’ என்று மீண்டும் கோபக் கேள்விகள் துரத்தின. தோல்வி, என் வைராக்கியத்தைக் கூட்டியது. என்னைப் போலவே, எம்.இ., படித்த என் நண்பன் தினேஷும் என்னுடன் இந்த முயற்சியில் இணைந்தான்.

பல தரப்பிலும் இரண்டு லட்சம் கடன் பெற்று, கரையான்சாவடியில் சற்று பெரிய அளவில் மீண்டும் திரு வள்ளுவர் உணவகம்தொடங்கினேன். 10 மாதங்கள் கடந்த நிலையில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. முழுக்க முழுக்க சிறுதானியம் என்று செய்யமுடியவில்லை. சாதாரண சாப்பாடு, பலகாரங்களு டன் சிறுதானிய உணவுகளையும் இணைத்து தருகிறேன். ஆனாலும், ஆவாரம் பூ சாம்பார், தினைப் பொங் கல், கம்பு லட்டு, சோள கொழுக்கட்டை, வில்வம்பூ தண்ணீர், ஏதேனும் ஒரு கீரை, கொள்ளு சூப், மூலிகை டீ என தருகிறோம். மிக தொலைவில் இருந்தும் பலர் வந்து சாப்பிடுகிறார்கள்.

பல கட்ட சோதனைகளைத் தாண்டி இன்றைக்கு காலூன்றிவிட்டேன். பார்ட்டனாராக சேர்ந்த நண்பன் தாக்குப் பிடிக்காமல் பாதியில் சென்றுவிட்டான். சமையல் மாஸ்டர்கள் கூட, இந்த சமையலை விரும்பாததால் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார்கள். அதே சமயம் எப்படியோ சில கைகள் ஒத்தாசைக்கு வந்து விடும். சிறுதானிய உணவுக்கான விழிப்பு உணர்வும் வரவேற்பும் பெருகிக்கொண்டே வருவது சந்தோஷம்.

கல்யாணம், பிறந்தநாள் விழா போன்ற விசேஷங்களுக்கு எல்லாம் இப்போது சிறுதானிய விருந்து கேட்கி றார்கள். வீட்டில் சிறுதானிய சமையலை செய்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதனால், அதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறோம். பக்கத்தில் உணவகங்கள் நடத்துபவர்கள் கூட சிறுதானிய பயிற்சி வகுப்பு களுக்கு வருகிறார்கள். அவங்களின் ஓட்டலில் ஏதாவது ஒன்று மட்டும் சிறுதானிய உணவாக தர முடியுமா என்று ஆலோசிக்கிறார்கள். இதுதான் என் ஆசை. சிறுதானிய உணவுப் பழக்கம் அதிகரித்தால் எனக்கு மகிழ்ச்சி. இதற்குத்தான் நான் உழைத்தேன்!’’ -கொள்ளு சூப்பை குவளையில் ஊற்றுகிறார், சுரேஷ் எம்.இ!
 
நன்றி:
-சாவித்ரி கண்ணன்
- விகடன்

இராமநாதபுர மாவட்ட MLA ஜவாஹிருல்லாஹ் உட்பட 291 பேர் கைதாகி விடுதலை

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளை அகற்றக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உள்பட 291 பேரை போலீசார் கைது செய்தனர். 


ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் தனியார் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று மாலை வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே அவர்களை ராமநாதபுரம் டி.எஸ்.பி.,(பொ) சேகர், இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன், பெரியசாமி தலைமையிலான போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். எம்.எல்.ஏ., மற்றும் பெண்கள் 69 பேர் உட்பட 291 பேர் கைது செய்யப்பட்டனர்.  

முற்றுகைப் போராட்டத்திற்கு ம.ம.க., மாவட்டச் செயலாளர் ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, த.மு.மு.க, மாவட்டச் செயலாளர் அன்வர்அலி, திருப்புல்லாணி ஒன்றிய த.மு.மு.க., தலைவர் ரைஸ் இப்ராகீம், ராமநாதபுரம் நகர் செயலாளர் பிஸ்மி என்ற நசிருதீன், கீழக்கரை நகர் தலைவர் சிராஜூதீன், நகர் ம.ம.க., செயலாளர் ஜஹாங்கீர் மற்றும் ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ., உள்ளிட்ட 291 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


செய்தி: தினத்தந்தி

தாலுகா அலுவலகங்களில் இ-சேவை, மக்கள் வரவேற்பு

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இ சேவை மூலம் அனைத்து சான்றிதழ்களையும் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மையம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது. இம்மையம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் செயல்படுகிறது. இதுவரை 347 பேர் விண்ணப்பித்ததில் 162 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மையத்தில், விண்ணப்பித்தவருக்கு சான்றிதழ் தயாரானதும் அவரது செல்லிடப் பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்யவும், பாஸ்போர்ட் பெற காவல்துறையினர் வழங்கும் சான்றிதழுக்கும் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் மின் கட்டணம், ஆயுள் காப்பீட்டுக் கழக தவணைத் தொகை செலுத்துதல் போன்றவற்றுக்கும் இம்மையங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் சான்றிதழ்கள் தயாராகி விடுகின்றன.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியது:
இச்சேவை மையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்களின் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்களுக்கும் இவ்வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் எவ்வித அலைச்சலும், மன உளைச்சலும் இல்லாமல் பொதுமக்கள் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.


செய்தி: தினமணி

கீழக்கரை பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 22 ம் வருட விளையாட்டுவிழா

No comments :
கீழக்கரை பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 22 ம் வருட விளையாட்டுவிழா அந்த பள்ளியின் தாளாளர் ஜனாப ,சரிபா அஜீஸ் அவர்கள் தலைமையில் நடந்தது.


இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கீழக்கரை காவல் துனைகண் கானிப்பாளர் K.மகேஸ்வரி M.SC ( IT ), அவர்கள் கலந்துகொண்டார்கள். மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் சுமையா ,சீதக்காதி அறக்கட்டளையின் பொது மேலாளர் ஜனாப் ,சேக் தாவூது,மற்றும் அப்பள்ளியின் முதல்வரும் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றும் மாணவர்களின் கராத்தே செய்துக்காட்டபட்டது,தேசிய அளவில் கோவையில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக கராத்தே பயிற்சி அளித்த பயிற்சியாளர் திரு.கண்ணன் அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியின் நிறைவாக அப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி  K.மகேஸ்வரி அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் அப்பள்ளியில் பனி புரியும் ஆசிரியையால் நன்றி கூறப்பட்டது.


செய்தி: கீழக்கரை மக்கள் நகர் நல இயக்கம்