முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 27, 2020

கீழக்கரை ஜே வி சி கைப்பந்து குழுவின் 29 வது ஆண்டு கைப்பந்து போட்டி!!

No comments :


கீழக்கரை வடக்கு தெரு மணல் மேட்டில் ஜே வி சி கைப்பந்து குழுவின் 29 வது  ஆண்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது .

 

இப்போட்டியில் பல ஊர்களில் இருந்து 30க்கும்  மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர் .

 

முதல் பரிசு ரூ 12 ஆயிரத்தை எப் பி டைலர் அணியும்,

2-வது பரிசு ரூ 10 ஆயிரத்தை  ஆர் கன்ஸ்டிரக்சன் அணியும் ,

3-வது பரிசு ரூ 8ஆயிரத்தை மாரியூர் முஹப்பது பாய்ஸ் &

4-வது பரிசு  ரூ 6 ஆயிரத்தை ஜே வி சி அணியும் வென்றது .

 




கால் இறுதி  போட்டிக்கு தகுதி பெற்ற அணிக்கு தலா  ஆயிரம் ரூபாய் வழங்கபட்டது .

 


ஏறாளமானோர் கண்டு களித்த இப்போட்டியினை வடக்கு தெரு ஜமாத் தலைவர் ஹாஜி கே எஸ் ரெத்தின முஹம்மது துவங்கி  வைத்தார் . இறுதி  நாளன்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கீழக்கரை புரவலர்கள் பரிசுகள் வழங்கினர் .

 

ஏற்பாடுகளை அல் ஜதீத் வாலிபால் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

செய்தி: திரு. நஸ்ருதீன், அல் ஜதீத் வாலிபால் க்ளப்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மைய மாணவர் சேர்க்கை!!

No comments :

 

ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இயங்கிவரும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையத்தில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ராமநாதபுரத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி நிர்வாகத் தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

 



ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையம் செயல்பட்டு வருகிறது.

 


இங்கு நடப்பு ஆண்டுகக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இளநிலைப் படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிகவியல் பெரு நிறுவன செயலகம் ஆகிய துறைகளும், முதுகலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிக பெரு நிறுவன செயலகம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

 

பாடப்பிரிவுகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல அலுவலகம் (மதுரை) 0452-2458966 என்ற தொலைபேசி எண் மற்றும் 9791234586 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ஔவையார் விருதுக்கு டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

 

உலக மகளிர் தினவிழாவினையொட்டி பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 

உலக மகளிர் தினவிழா ஆண்டுதோறும் மார்ச் 8 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான உலக மகளிர் தினவிழா அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு ஔவையார் விருது வழங்கப்படவுள்ளது.

 


இதற்கு தகுதியான நபர்கள் டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாகவும், சமூகநலனைச் சேர்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருக்கவேண்டும். தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தை அணுகி இணைப்புப் படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி வழங்கவேண்டும்.

 

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, December 20, 2020

ராமநாதபுரம் நகராட்சியில் சாக்கடை அடைப்புகளை அகற்றும் ரோபோ எந்திரத்தை கலெக்டர், எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சியில் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர், பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும் ரோபோ எந்திரத்தை தொடங்கி வைத்தனர்.

 

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடைகளில் பணி செய்யும்போது எதிர்பாராத விதமாக உயிரிழப்புகள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது தவறு என சட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளை முற்றிலுமாக தவிர்த்திடும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் நகராட்சியில் ஓ.என்.ஜி.சி.சமூக பொறுப்பு நிதி ரூ.45 லட்சம் மதிப்பில் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் சார்பாக பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும் ரோபோ எந்திரம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

 


ராமநாதபுரம் நகராட்சியில் 10,500-க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகளும் 2,100-க்கும் மேற்பட்ட மனிதன் உட்புகும் நுழைவுகள் உள்ளன. இவற்றில் கழிவு நீர் செல்ல தடை ஏற்படும் பட்சத்தில், அதனை உடனே சரிசெய்ய இந்த ரோபோ எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

இந்த எந்திர ரோபோ ஜென் ரோபோடிக் இன்னோவேஷன் எனும் திருவனந்தபுரத்தை சார்ந்த நிறுவனம் வடிவமைத்து உள்ளது.இந்த ரோபோடிக் எந்திரத்தில் ஆபத்தான விஷ வாயுக்களை கண்டறியும் வசதி, எளிய முறையில் இயக்கும் வசதி, குறைவான எடை, கேமரா வசதி மற்றும் தண்ணீர் உட்போகா வண்ணம் அமைக்கப்பட்டு இருப்பதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகவும் பயனாக அமைந்துள்ளது.

 

முதற்கட்டமாக ராமநாதபுரம் நகராட்சியில் செயல்படுத்தப் பட்டுள்ள இந்த ரோபோ எந்திரத்தின் செயல்திறன் மற்றும் பயன்பாட்டை பொறுத்து மாவட்டத்தின் பிற உள்ளாட்சி அமைப்புகளையும் தேவைக்கேற்ப இந்த எந்திரத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, December 14, 2020

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

 

அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.,பிரிவு மாணவர்களுக்கு இளங்கலை பட்டபடிப்பிற்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 


முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

 

தகுதியுள்ள மாணவர்கள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்பிக்க டிச.,31 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்,

என கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, December 8, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் காளான் வளர்ப்பு / கண்காணிப்பு கேமரா இலவச பயிற்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், காளான் வளர்ப்பு, கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்தல், பழுதுபார்த்தல் ஆகிய பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

 


கிராம பகுதியைச் சேர்ந்த 19 முதல் 45வயதிற்குட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம்.

 

காளான் வளர்ப்பு பயிற்சிக்கு டிச.,10க்குள்,

பிறபயிற்சிகளுக்கு டிச., 17க்குள்

04567- 221 612, 80567 71986 என்ற எண்களில் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும் என மைய இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, December 6, 2020

விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, சாயல்குடி, ராமேசுவரம், ராமநாதபுரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நயினார்கோவில் ஒன்றியம் முத்துப்பட்டினம், வாணியவல்லம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரில் மூழ்கி அழுகிம் வரும் நெல் மற்றும் மிளகாய் செடிகள் சேதமாகி வருகின்றன.

 

ராதாபுளி வருவாய் கிராமத்தில் 518 எக்டேர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளது. 25 ஏக்கர் பரப்பில் மழைநீர் தேங்கி பயிர் சாய்ந்துள்ளது. முட்கள் நிறைந்து இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, வாணியவல்லம் கிராமத்தில் கோ -51 ரக நெல் பயிர் மழையால் சாய்ந்துள்ளது. வாணியவல்லம் கிராமத்திலும் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

 


இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட சிறப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட நயினார்கோவில் பகுதியில் புரவி புயல் மழை சேதம், மழைநீரால் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

 

அப்போது மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பானு பிரகாஷ், நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ்பாபு, ஊராட்சி தலைவர்கள் வாணியவல்லம் நாகநாதன், நயினார்கோவில் ஜோதிமணி உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.