முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 23, 2017

மதுரை-ராமேஸ்வரம் மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க தொடரும் கோரிக்கை!!

1 comment :


மதுரை-ராமேஸ்வரம் மார்க்கத்தில் பகல் நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை-ராமேஸ்வரம் மார்க்கத்தில் அகல ரயில்பாதையில் தற்போது மூன்று நேரங்களில் மட்டுமே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் வழக்கமாக கூட்டம் அலைமோதும். ரயில் பெட்டிகளின் கழிவறைகள்ஏறும்இறங்கும் வழிகள்நடந்து செல்லும் இடங்கள் என அனைத்திலும் அமர்ந்து பயணிக்கின்றனர். 
கடந்த ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மார்க்கத்தில் கூடுதலாக பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும்தற்போது இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என மாவட்ட மக்கள்வர்த்தக சங்கத்தினர்ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காலைநண்பகல்மாலை நேரங்களிலும்இதேபோல் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு வேளைகளிலும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. 




கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மானாமதுரை, ராமேஸ்வரம் அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கத் துவங்கியபோது மதுரை, ராமேஸ்வரம் மார்க்கத்தில் காலை, மாலை என இரண்டு பயணிகள் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. கடந்த 2009 முதல் நள்ளிரவு ரயில் இயக்கப்பட்டது. பின்பு அந்த ரயில் நண்பகல் ரயிலாக மாற்றப்பட்டது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்க தொடங்கி 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இந்த மூன்று பயணிகள் ரயிலே மதுரை, ராமேஸ்வரம் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. 

அதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பகல் நேரத்தில் கூடுதலாக 2 ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)