முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 11, 2024

சவுதி அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியின் வருடாந்திர வாலிபால் பேட்டி!!

No comments :

சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியில் வருடாந்திர வாலிபால் பேட்டி  கடந்த மார்ச் மாதம் 3,5 & 7 தேதிகளில் நடந்து முடிந்தது.

 

இதில் 6 அணிகள் கலந்து கொண்டது.

 









வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு வெற்றி கோப்பை, மெடல்கள், மற்றும் ரொக்க பரிசுகளை இந்த கம்பேனியின் இயக்குனர் SAS சதக்கத்துல்லா, மேலாளர்கள் சீனி அலி, மஹ்ரூப் அப்துல் காதர், நீயாசுதீன் மற்றும் அஸ்மாவில் ஆகியோர் வழங்கினார்கள்.

 

செய்தி: பயிற்சியாளர் ஹமீது ராஜா


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, February 20, 2024

கீழக்கரை பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!!

No comments :

கீழக்கரை பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!!

 

பிப்.19-ம் தேதி கீழக்கரை முஹைத்தீனியா பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.

 

மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி மாணவர்களுக்கான இண்டராக்ட் கிளப் தொடங்கப்பட்டது.

 


இதையொட்டி கீழக்கரை ரோட்டரி சங்கம், கீழை கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி முதல்வர் அஸ்வத் உம்மா நன்றி கூறினார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, January 22, 2024

சவுதி அரேபியாவில் நடைபெற்ற கீழை-சவுதி அமைப்பின் மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு!!

No comments :

கீழை சவுதி அமைப்பின் சார்பாக, கீழக்கரை மக்களின் ஒன்றுகூடல், சவுதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் சிறப்பாக நடந்தேறியது.

 




இந்த நிகழ்வில், அமைப்பின் கவுரவ தலைவர் ஜனாப்.முகைதீன் சீனி அலி அவர்கள் தலைமை வகிக்க, இதர உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

 

நிகழ்ச்சியை கீழை.இர்ஃபான் அவர்கள் கிராஅத் ஓத துவங்கி வைத்தார். முகைதீன் சீனி அலி அவர்கள் நமது அமைப்பின் நோக்கம் மற்றும் ஊர் மக்கள் ஒற்றுமை பற்றி தலைமையுரை ஆற்றினார்கள். ஜனாப்.தாஹிர் மற்றும ஜனாப்.ஆசிம் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினர்.

 


இதில் சவுதியில் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் சகோதரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த பாரம்பரிய மதிய உணவு வகைகளுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, November 1, 2023

ரோட்டரி கிளப் நடத்திய மாவட்டம் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்!!

No comments :

இராமநாதபுரம் மாவட்டம் அளவில் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் , ரோட்டரி கிளப் மூலம் நடைபெற்றது.

 



வேலுமனோரன் பெண்கள் கலை கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயது பிரிவில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளியை சேர்ந்த 
H.Hameed Al Zehran ,6 ஆம் வகுப்பு, 3 வது இடம் பெற்றார்.

ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் அடிப்படையில் அவர் மூன்றாம் இடம் பெற்றார்.


 

இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் சேர்ந்த திரு. சுந்தரம் மற்றும் மருத்துவர் ராசிக்தீன் கலந்து கொண்டு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர்.

 

செய்தி: ஹமீது ராஜா, விளையாட்டு பயிற்சியாளர்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு!!

No comments :

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.




இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். மேலும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, October 18, 2023

கீழக்கரையில் நடைபெற்ற ராமநாதபுரம் ஓபன் மாவட்ட மகளிர் கைப்பந்துப் போட்டி!!

No comments :

முகமது சதக் அறக்கட்டளை மற்றும் VTeam இணைந்து 15.10.2023 அன்று கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில், பெண்களுக்கு இடையே விளையாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் ஓபன் மாவட்ட மகளிர் கைப்பந்துப் போட்டி நடந்தது.


 

முதல் இடம் - ஆர்.எஸ்.வி.சி., பரமக்குடி,10000/- ரூபாய் மற்றும் கோப்பை,பதக்கங்கள்,சான்றிதழ்கள்.

 2வது இடம் - வேலுமனோகரன் கல்லூரி,இராமநாதபுரம்,8000/- ரூபாய் மற்றும் கோப்பை,பதக்கங்கள்,சான்றிதழ்கள்.

 3வது இடம் -தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி ,கீழக்கரை 6000/- ரூபாய் மற்றும் கோப்பை,பதக்கங்கள்,சான்றிதழ்கள். 

 4வது இடம் - செய்யது அம்மாள் கல்லூரி,இராமநாதபுரம், 4000/- ரூபாய் மற்றும் சான்றிதழ்கள்.




 

சிறந்த கைப்பந்து நடுவர் விருது:

1.கார்த்தி, தமிழ்நாடு மாநில நடுவர்.

2. நாகூர்கனி, தமிழ்நாடு மாநில நடுவர்.

3. சாமுவேல், தமிழ்நாடு மாநில நடுவர். 

 

சிறந்த பயிற்சியாளர் விருது:

1. ஹமீத் ராஜா, ஜே.வி.சி,கிழக்கரை.

2. கார்த்தி, ஆர்எஸ்விபி, பரமக்குடி.

3. சுமதி, வேலுமனோகரன் கலைக் கல்லூரி, ராம்நாடு.

4. சவரி, செய்யது அம்மாள் கல்லூரி, ராம்நாடு. 

 


மேலும் சிறந்த 9 வீராங்கனைகளை  தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 13000 வழங்கினார் Dr.P.R.L சதக் அப்துல் காதர்





இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, P.R.L சதக் அப்துல் காதர், S.S.A ஹுசைன் ஜலால், யூசுப் சாஹேப், S.M.Yஅஸ்லம் ஹுசைன், M.M.K முகமது காசிம் , M.M.K மொஹைதீன் இப்ராஹிம், ஷேக் உசேன், ESM பைசல், SMY சதக் ஆகியோர் கலந்து கொண்டு வீராங்கனைகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.

வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர்க்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்கிறோம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 5, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 7-ந்தேதி நெடுந்தூர ஒட்டப்போட்டி!!

No comments :

மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையாக அண்ணா நெடுந்தூர ஒட்டப்போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 7-ந்தேதி நடத்தப்படுகிறது.

 

அதன்படி 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.

 

ஆண்கள்

17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் 8 கி.மீ,
5 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 கி.மீ,

 

பெண்கள்

17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் 5 கி.மீ,
25 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கி.மீ.

தூரத்திற்கு நெடுந்தூர ஒட்டப்போட்டி நடத்தப்படும்.

இந்த போட்டிகள் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். சாலை பிரிவில் 7-ந்தேதி காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

 

போட்டியில் பங்குபெறும் அனைவரும் உடற்தகுதி குறித்து சுயஉறுதிமொழி படிவம் தரவேண்டும். 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். ஆதார்கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார்கார்டு கொண்டு வர வேண்டும்.

 

இப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.5000, ரூ..3000, ரூ.2000


வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கப்படும்.

 

இதில், கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் உடல் தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயது சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்குள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பதிவுசெய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, October 4, 2023

கீழக்கரையில் நடைபெற்ற JVC கைப்பந்து போட்டி!!

No comments :

கீழக்கரை வடக்கு தெரு, மணமேட்டில், JVC கைப்பந்து கழகம் சார்பாக ,18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான, கைப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றுது.

                  

 

27 அணிகள் கல்ந்து கொண்ட இந்த போட்டித்தொடரில் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஏர்வாடி EIFA மற்றும் கீழக்கரைJVC சிறப்பாக விளையாடினர். 

முடிவுல் ஏர்வாடி EIFA வெற்றிக்கோப்பையை வென்றது.

 






கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு பெற்றா அணிகளின் விபரம்:

1 PRIZE -ஏர்வாடி EIFA

2 PRIZE-கீழக்கரைJVC

3 PRIZE- ஏர்வாடி RASITH FRIENDS

4 PRIZEகீழக்கரைJVC-B

5 PRIZE கீழக்கரை CVC

6 PRIZE கீழக்கரை CVC

7 PRIZE மதுரை

8 PRIZE மண்டபம்

               

 

தகவல்: ஹமீது ராஜா, கைப்பந்து பயிற்சியாளர்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, September 15, 2023

இராமநாதபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான, பெண்கள் கைப்பந்து போட்டி!!

No comments :

முதலமைச்சர் கோப்பைக்கான, பெண்கள் கைப்பந்து பிரிவு போட்டி இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டரங்கில் நடைபெற்றது.

 

இப்போட்டியில்,
இராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி முதல் இடம் பெற்று, கோப்பையை வென்றது. ரொக்கப்பரிசாக ரூ.36,000/- வழங்கப்பட்டது

கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதிர் பெண்கள் கல்லூரி,இரண்டாம் இடம் பெற்றது ரொக்கப்பரிசாக ரூ.24,000/- வழங்கப்பட்டது

 



இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் பாத்திமா நவ்ரா மற்றும் தீபிகா இருவரும் மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

செய்தி: VTeam Social Trust


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.