முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 8, 2016

முழுபயன்பாடை அடையுமா பரமக்குடி புறவழிச்சாலை..?!!

No comments :
பரமக்குடியில் ஐடிஐ-க்கு எதிரே ஆரம்பிக்கும் புறவழிச்சாலையில் எந்தவித வழிகாட்டுப்பலகையும் இல்லாதபடியால் இராமநாதபுரத்திலிருந்து வாகனத்தில் வருவோர் புறவழிச்சாலையை பயன்படுத்தும் விதத்தில் வழிகாட்டிப்பலகை ஒன்றை நிறுவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்படுகிறது.


மேலும்; புறவழிச்சாலை முழுதும் மின் விளக்கில்லாமல் இரவில் பாதுகாப்பில்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போதிய மின்விளக்குகள் அமைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு புறவழிச்சாலையின் முழுப்பயனை அடைய வழிவகை செய்யவும் வேண்டுகிறோம்.


 - *அ.சேக் அப்துல்லா*, இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம், 24 CCTV கேமராக்கள் பொருத்தப்படுகிறது!!

No comments :
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக புதிய புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு தகுதியான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கோர்ட்டு உத்தரவின்படி பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு பயணிகள் மற்றும் ரெயில்வே உடைமைகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் கடந்த ஆண்டு 4 நகை பறிப்பு வழக்குகளும், இந்த ஆண்டு இது வரை 3 நகை பறிப்பு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சத்தில் பலவீனமாக உள்ள ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது.

இந்தநிலையில் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தின் முக்கியத்துவம் கருதியும், பயணிகளின் பாதுகாப்பு கருதியும் இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது. இதற்காக கூடல்நகர் பகுதியில் அமைந்துள்ள புறக்காவல் நிலையம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படையினர் ராமநாதபுரம் புறக்காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.


இதன்படி ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் கடந்த 1–ந்தேதி முதல் தற்காலிக கட்டிடத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. பரமக்குடியில் இருந்து உச்சிப்புளி வரையிலான பகுதிகள் இந்த புறக்காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக சப்இன்ஸ்பெக்டர் சப்தார் இப்ராகிம் தலைமையில் 4 தலைமை காவலர்கள், 5 காவலர்கள் என மொத்தம் 10 பேர் இந்த புறக்காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில்நிலைய உடைமைகள் பாதுகாப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பு, தினசரி சோதனை, இரவு நேர ரோந்து உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு பணிகளையும் இந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதவிர, ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் புறக்காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினதந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

அனுமதியின்றி மணல் அள்ளிய இருவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கணேசலிங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ரமலான்நகர் செட்டி ஊருணி பகுதி வழியாக வந்த 2 டிராக்டர்களை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்த புல்லங்குடி அழகு மகன் கதிர்வேல்(வயது 28), இளமனூர் முனியசாமி மகன் கதில்ராமு(35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். 

செய்தி: தினசரிகள்

மேலும் இதுதொடர்பாக டிராக்டர்களை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)