முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 20, 2020

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று; கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை!!

No comments :

தமிழகத்தில் சில மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

  


இந்த நிலையில் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் நேற்று காலை முதலே பலத்த காற்று வீசியது. இதுபோல் தனுஷ்கோடி பகுதியிலும் பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகிறது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே பலத்த காற்று காரணமாக பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி இருந்த ஒரு மீன்பிடி விசைப்படகின் நங்கூர கயிறு அறுந்து கரையோரம் உள்ள கடல் பகுதியில் தரைதட்டிய நிலையில் நின்றது. அந்த படகை மீட்டு ஆழமான கடல் பகுதிக்கு கொண்டு சென்ற மீனவர்கள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.