முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, September 15, 2023

இராமநாதபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான, பெண்கள் கைப்பந்து போட்டி!!

No comments :

முதலமைச்சர் கோப்பைக்கான, பெண்கள் கைப்பந்து பிரிவு போட்டி இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டரங்கில் நடைபெற்றது.

 

இப்போட்டியில்,
இராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி முதல் இடம் பெற்று, கோப்பையை வென்றது. ரொக்கப்பரிசாக ரூ.36,000/- வழங்கப்பட்டது

கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதிர் பெண்கள் கல்லூரி,இரண்டாம் இடம் பெற்றது ரொக்கப்பரிசாக ரூ.24,000/- வழங்கப்பட்டது

 



இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் பாத்திமா நவ்ரா மற்றும் தீபிகா இருவரும் மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

செய்தி: VTeam Social Trust


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

பெண் குழந்தைகளுக்கான மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளது.

 

இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் 31-ன்படி 13 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

 


பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திரும ணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை, பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வற்றின் அடிப்படையில் விருது வழங்கப்படும்.

 

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை வருகிற அக்டோபர் 27-ந் தேதிக்குள்

மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்,

ராமநாதபுரம்

என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, August 29, 2023

ராமநாதபுரத்தில் வரும் 31-ந் தேதி மாராத்தான் போட்டி!!

No comments :

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்த ஆண்டு வினாடி வினா, நாடகம், ரீல்மேக்கிங் நடத்தப்பட்டன.

 

தொடர்ந்து மாரத்தான் போட்டி 31-ந் தேதி நடைபெற உள்ளது.

 


இதில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் திருநங்கைகள் என மொத்தம் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

 

போட்டி காலை 7 மணிக்கு ராமேசுவரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு முதல் பேராவூர் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற உள்ளது. போட்டியை கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.

 

வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் 7 மாணவர்களுக்கு தலா ரூ.ஆயிரமும் வழங்கப்படும்.

 

போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

 

இந்த தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, August 5, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்கள் மின் மோட்டர் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.

 

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

 

இதற்கு தையல் தைக்க தெரிந்த தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 


விண்ணப்பத்துடன் வருமானச் சான்று ரூ.72,000-க்குள்,

இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது),

6 மாத கால பயிற்சி, வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று,

ஜாதிச் சான்று,

கடவுச் சீட்டு

விண்ணப்பதாரரின் வண்ணப் புகைப்படம்-2,

விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மகளிர், மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல்,

ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.

 

விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அடுத்த மாதம் செப். 15- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தகுதி வாந்த நபர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, July 22, 2023

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், கிராமப்பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணிபுரிய வில்லை. பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.

 

அரசு மருத்துவமனைக்கு தினமும் குறைந்தது 400-க் கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள் நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு வருபவர் களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க வழி இல்லை.

 


இது தவிர பெரும் பான்மையான மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

 

இந்த கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பா விதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

எனவே அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, July 20, 2023

ராமநாதபுரம் பஸ் நிலையம் தற்காலிகமாக இடமாற்றப்படுகிறது!!

No comments :

ராமநாதபுரம் ரூ.20 கோடியில் ராமநாதபுரம் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் இன்று முதல் பஸ் நிலையம் இடமாற்றப்படுகிறது. பயணிகள் வசதிக்காக தற்காலிகமாக 2 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் இயங்கி வந்தது. இந்த பஸ் நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து அடிக்கடி பயணிகள் மீது இடிந்து விழுந்ததால் இந்த பஸ் நிலையத்தை முழுவதுமாக இடித்து விட்டு ரூ.20 கோடி செலவில் புதிதாக கட்ட அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே 22 பஸ்கள் நிறுத்தக்கூடிய இடம், 45 கடைகளுடன் இயங்கி வந்த இந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்து 35 பஸ்கள் நிறுத்தும் இடம், 90 கடைகள் கட்டப்பட உள்ளது.





இதற்காக பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டு பாதி கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது. மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டி இருந்ததால் நேற்று வரை இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.


இந்தநிலையில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை, ராமேசுவரம், திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், சாயல்குடி, கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இன்று(வியாழக்கிழமை) முதல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, கோவை, ஈரோடு, சேலம், முதுகுளத்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தற்போதைய பஸ் நிலையம் அருகே சந்தை திடலில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட உள்ளது.

இந்த பஸ்கள் விரைவில் மதுரை ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் தெரிவித்தனர். இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ள நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் பல லட்ச ரூபாய் செலவில் சிமெண்டு தளம், கழிப்பறை, தற்காலிக கடைகள், மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனை கலெக்டர் விஷ்ணுசந்திரன், பயிற்சி சப்-கலெக்டர் நாராயணசர்மா, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஆணையாளர் அஜிதாபர்வீன் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, June 15, 2023

ராமநாதபுரத்தில் வரும் ஜூன் 16ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :

தமிழக அரசின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைதேடும் இளைஞர்களுக்காக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு பணி நியமனம் பெறலாம். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

 


தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.

 

மேலும் தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் TamilNadu Private Job Portal tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இதில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலைதேடும் இளைஞர்களும் பயன்பெறலாம்.

 

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, May 29, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விற்பனை அங்காடி இயக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

 

ராமநாதபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் வழங்கப்படுகிறது. இந் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

 

மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் சுய உதவிக்குழு உறுப்பி னராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப் பட்ட மாற்றுத்தி றனாளிகள், மாற்றுத்தி றனாளி விதவைகள், முதிர் கன்னி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே வாகன விற்பனை அங்காடி வழங்கப்படும்.

 

தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சிறப்பு சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்கள் சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓரு ஆண்டிற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். வாகன அங்காடிக்கு வாடகை NRLM இணையதளத்தில் பதிந்து செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும்.

 


அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகனத்தில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதை பயனாளிகளே மேற்கொள்ள வேண்டும். வாகனத்திற்கு பயனாளியே மின்னேற்றம் (Electric Charge) செய்து பயன்படுத்த வேண்டும். வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடம் வாகனத்தை எவ்வித பழுதுமின்றி ஒப்படைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் உறுப்பினரிடம் இருந்து வாகன அங்காடி திரும்ப பெறப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி திரும்ப பெறப்பட்டு தகுதியான வேறு பயனாளிக்கு வழங்கப்படும். தகுதியுள்ள மாற்றுத்தி றனாளிகள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள்

திட்ட இயக்குநர்,

மகளிர் திட்டம்,

கலெக்டர் அலுவலகம் வளாகம்,

ராமநாதபுரம்

 

என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) நகல் களையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, May 19, 2023

''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான 

பணியாளர் தேர்வாணையம் (SSC),

ரயில்வே தேர்வு வாரியம் (RRB),

வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) 


உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

 

மேற்கண்ட மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

 


இதில் கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

இது குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

 

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, May 9, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.30 சதவீதம் தேர்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.30 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,790 மாணவர்கள், 7,516 மாணவிகள் ஆக மொத்தம் 14,306 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். திங்கள்கிழமை தேர்வு முடிவுகள் வெளியானது.

 

இதில் 6,413 மாணவர்கள், 7,364 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன்படி மாணவர்கள் 94.45 சதவீதம் பேரும், மாணவிகள் 97.98 சதவீதம் பேரும் ஆக மொத்தம் 96.30 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அரசு உதவிபெறும் 37 மேல்நிலைப் பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. 53 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில்,

43 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மொத்தமாக 160 பள்ளிகளில் 73 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

 




ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97.20 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்றது. நிகழாண்டு 96.30 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 12-ஆவது இடத்துக்கு சென்றது.

 

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து கூறியதாவது:

17 பள்ளிகளில் முழுமையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் தேர்வு எழுதியதால் கடந்தாண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்தது. இதுகுறித்து அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


முகவை முரசு சார்பாக மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, April 5, 2023

BESPOKE DESIGNER ஷோரூம்; மதுரையில் ஓர் புதிய உதயம்!!

No comments :

 

மதுரையில் ஓர் புதிய உதயம்.


கே. கே. நகர், ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் அருகில் கீழக்கரை சேர்ந்த FB குழுமம் மற்றும் மதுரை சேர்ந்த சகோதரர் ரபீக் அவர்களால்  BESPOKE DESIGNER ஷோரூம் திறக்கப்பட்டு உள்ளது.







தாங்கள் அனைவரும் வருகை தந்து, ஆதரவு தந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றனர் உரிமையாளர்கள்.

முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, March 10, 2023

கீழக்கரையில் மார்ச் 11-12 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கல்வி குழுமங்கள் மற்றும் நடிகர் விஐய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் ஆகியவற்றின் சார்பில் கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

 

நாளை (11-ந்தேதி) மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற உள்ள இந்த முகாமில் தலைசிறந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களின் பணியாளர் தேவைக்காக சுமார் 15 ஆயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளன.

 


10-ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் மேலாண்மைதுறை, எம்.பி.ஏ, கணினி அறிவியல், மருத்துவம் சார்ந்த இதர படிப்புகள் படித்த அனைவரும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் எதிர்கால வாழ்விற்கான சிறந்த வேலைவாய்ப்பினை பெற்று பயன்அடையலாம்.

 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள http://jobfair.vvvsi.com என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு இலவசம் என்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம் என்று முகமது சதக் கல்வி குழுமங்களின் தலைவர் முகமது யூசுப் சாஹிப், இயக்குனர் ஹாமீது இப்ராகிம் ஆகியோர் தெரிவித்தனர்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, March 3, 2023

கீழக்கரை அரசு மருத்துவமனையை மேம்படுத்த அமைச்சரிடம் மனு!!

No comments :

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதி தாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தை திறந்து வைப்ப தற்கு வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனை, காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

 


அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

 

கீழக்கரை அரசு ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த நிலையில் கீழக்கரை சுற்று வட்டார பகுதி மக்கள் மருத்துவத்துக்கு இங்கு வந்து சென்றனர். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோதே பணியாளர்கள், உபகரணங்கள் பற்றாக்குறையாக இருந்தது. தற்போது தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் இதே நிலை நீடித்து வருகிறது. 


எனவே ஆஸ்பத்திரியை மேம்படுத்தி புதிய கட்டிடம் அமைத்து தரவும், தளவாடப்பொருட்கள் மற்றும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனு வில் குறிப்பிட்டுள்ளது. 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, February 23, 2023

ராமநாதபுரத்தில் பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெறுகிறது!!

No comments :

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் 14 முதல் 24 வயது வரையிலான இளம் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

 

இதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்களுக்கான தேர்வு வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.



இதற்கான தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தங்களது பெயர்களை வருகிற 26-ந்தேதி மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் உள்ள வலைப்பயிற்சி களத்தில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் உரிய படிவத்துடன் ஆதார் கார்டு நகலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

 

இதுகுறித்து மேலும் விவரங்களை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செயலாளர் மாரீஸ்வரனை 9443112678 என்ற எண்ணிலும்,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செயலாளர் சதீஷ்குமாரை 9443978488 என்ற எண்ணிலும்

தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, February 8, 2023

மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

காலியிடங்கள் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் 19 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 


அதன்படி பரமக்குடி வட்டார இயக்க மேலாளர்,

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்

திருப்புல்லாணி-2,

திருவாடானை-4,

ஆர்.எஸ்.மங்களம்-2,

மண்டபம்-1,

நயினார்கோவில்-1,

போகலூர்-1,

முதுகுளத்தூர்-3,

கமுதி-2,

கடலாடி-3

 

என மொத்தம் ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் 19 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் காலியிடங்கள் உள்ளன. வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரியாக இருக்க வேண்டும். கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை உண்டு.

 

28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மகளிர் நல மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் 2-3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

 

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வரும் 22.2.23-க்குள் கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம்

என்ற முகவரியில் விண்ணப்பதாரர்கள் புகைப்படம், சுயவிவரங்களுடன் உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தகுதியானவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். தேர்வு நடைபெறும், தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, February 1, 2023

விவசாயிகளுக்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு; எப்படி பெறுவது?!!

No comments :

தமிழக அரசின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுப்புற சூழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிர் சாகுபடியுடன் மரம் வளர்ப்பினை ஊக்கப்படுத்த ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

வேளாண் உழவர் நலத்துறை மூலம் முழு மானியத்தில் மரக்கன்றுகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடவு செய்ய ஒரு எக்டேருக்கு 160 மரக்கன்றுகளும், அடர் நடவு முறையில் நடவு செய்வதாக இருந்தால், ஒரு எக்டேருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகளும் வழங்கப்படும். அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 2 எக்டேர் பரப்புக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்படும்.

 


இத்திட்டத்தின் மூலம் 29 வகையான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

செம்மரம், புங்கம், வேங்கை, குடம்புளி, மகோகனி, கொடுக்காபுளி, மருதம், பூவரசு, நாவல், இலுப்பை, நெல்லி ஆகிய மரக்கன்றுகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இத்திட்டத்தினை பெற்று பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளின் நிலத்தை அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்கப்படும்.

 

விவசாயிகளுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இலவசமாக பெற்று நடவு செய்யலாம். மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, January 30, 2023

வக்பு வாரியத்தின் கீழ் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 180 வக்பு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதன்படி ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்க தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் மானிய விலையில் 125 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

 


வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணி புரியும் உலமா நலவாரிய உறுப்பி னர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உறுப்பினர் செயலர் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பின ராகவும் மற்றும் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் உறுப்பினராகவும் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும்.

 

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் வைத்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கு வக்பு கண்காணிப்பாளரின் சான்று மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, January 23, 2023

முகவை சங்கமம் புத்தக திருவிழா; "மனதில் நிற்கும் வாசகம்" போட்டி!!

No comments :

ராமநாதபுரத்தில் முகவை சங்கமம் புத்தக திருவிழா அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

அதற்கு முன்னோட்டமாக புத்தக திருவிழாவிற்கான லோகோ மற்றும் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் புத்தகங்களால் வடிவமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் வடிவில் லோகோ அமைக்கப்பட்டுள்ளது. அதே போல புத்தக திருவிழா சின்னம் கடற்பசு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

 


முகவை சங்கமம் புத்தக திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மனதில் நிற்கும் வாசகம் போட்டி நடத்தப்படுகிறது. புத்தக திருவிழா முழுவதும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எழுதிய வாசகங்கள் இடம் பெறும். இந்த வாய்ப்பை பெறுவதற்கு வாசகங்களை 04573-231610 என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அழைத்து தங்களது வாசகங்களை பதிவு செய்யலாம். மேலும் 70944 39999 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் mugavaisangamam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் இந்த மாதம் 30-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

 

சிறப்பான வாசகங்களை அனுப்பியவர்களுக்கு புத்தக கூப்பன், சான்றிதழ் மற்றும் அனைத்து நிகழ்வுகளுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.

 

முகவை சங்கமம் புத்தக திருவிழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் புத்தக சுவர் அமைப்பதற்கு புத்தக நன்கொடை பெறப்படுகிறது. இதில் தங்களது புத்தகங்கள் இடம்பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் புத்தகங்களை கலெக்டர், ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்கள், அனைத்து அரசுத் துறை தலைமை அலுவலகங்கள், முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் புத்தக திருவிழா மைதானம் ஆகிய இடங்களில் வழங்கலாம். இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, January 21, 2023

மாவட்ட அளவிலான மகளிர்களுக்கான எறிபந்து போட்டி விழா!!

No comments :

கீழக்கரையில் V-team குழுஅறக்கட்டளையும் மற்றும்

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய 

இராமநாதபுரம் மாவட்ட அளவிலான மகளிர்களுக்கான எறிபந்து போட்டிகளை ,(16.01.23 மற்றும் 17.01.23) இரண்டு நாட்கள் நடத்தினார்கள்.

 

இறைவணக்கத்துடன் இனிதே துவங்கிய இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட  விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் திரு. தினேஷ் குமார் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் தனியார் விளையாட்டு மன்றத்தின் மாணவிகள் உள்பட மொத்தம் 22 குழுவினர் பங்கேற்றனர்.

 






அதில் வெற்றி பெற்றவர்கள்,

 

1.முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம் கேடயம் மற்றும் கோப்பையை

காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வென்றனர். 


2.இரண்டாம் பரிசு ரூபாய் 6,500 கேடயம் மற்றும் கோப்பையை கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும். 
 

 

3.மூன்றாவது பரிசு ரூபாய் 4,500 கேடயம் மற்றும் கோப்பையை,

தாசிம்பீவி கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சங்கத்தின் Grippers குழுவினரும் வென்றனர். 




இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில்  தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதோடு  போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும்  வழங்கி சிறப்பித்தார்கள்,

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, January 16, 2023

கீழக்கரையில் ஜன-16 & 17 தேதிகளில் மாவட்ட அளவிலான எறி பந்து போட்டிகள்!!

No comments :
ஜன-16 & 17 தேதிகளில் கீழக்கரை தாசிம் பீவி பெண்கள் கல்லூரியில் மாவட்ட அளவிலான எறி பந்து போட்டிகள் நடக்க விருக்கிறது.





பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு சிற்ப்பிக்குமாறு விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் (TBAKC & V-TEAM) கேட்டுக்கொள்கின்றனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, January 13, 2023

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி நிதியில் மறுசீரமைப்பு பணிகள்!!

No comments :

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி நிதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணியை 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

 

ராமேசுவரம் கோவில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்ய இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அது போல் பல மாநிலங்களில் இருந்தும் ராமேசுவரத்திற்கு பல ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதால் சராசரியாக ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் ரெயில் மூலமாக வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தை ரூ.90 கோடி நிதியில் மறு சீரமைப்பு செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணியானது மும்பையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தில் ரெயில்வே நிலையத்தை மறுசீரமைக்கும் செய்யும் பணியை தனியார் கட்டுமான நிறுவனம் தொடங்கியுள்ளது.

 

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

ராமேசுவரம் ரெயில் நிலையம் மதுரை-ராமேசுவரம் ரெயில்வே பிரிவில் உள்ள ஒரு முக்கியமான ரெயில் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையம் புறநகர் இல்லா ரெயில் நிலையப் பிரிவுகளில் மூன்றாம் நிலையில் வருகிறது. இந்த ரெயில் நிலையத்தை தினந்தோறும் சராசரியாக 9 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த ஆணை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ரூ.90.20 கோடி செலவில் 18 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிட மும்பையைச் சேர்ந்த தனியார் திட்ட மேலாண்மை நிறுவனம் பணி அமர்த்தப்பட்டுள்ளது. நிலப்பரப்பு கணக்கெடுப்பு, மண் மாதிரி பரிசோதனை, மரங்கள் கணக்கெடுப்பு, அசையும், அசையா சொத்துக்கள் கணக்கெடுப்பு, பருந்து பார்வை ட்ரோன் ஆய்வு ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன. கட்டுமான பணியிடங்களில் உள்ள பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர் அலுவலக கட்டிடப் பணி நிறைவு பெற உள்ளது. சிமெண்ட் கலவையை கடத்தும் கன்வெயர் தடம் அமைக்கப்பட்டுள்ளது. 11 இடங்களில் பணிகளை தொடக்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 2 மாடி கட்டிடம் ரெயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் தலா ஒரு ரெயில் நிலைய கட்டிடம் உருவாகுகிறது. 



ராமேசுவரம் கோவில் கோபுர அமைப்புடன் நவீன கட்டிடக்கலை அம்சத்துடன் ரெயில் நிலைய கட்டிடம் அமைய இருக்கிறது. கிழக்குப் பகுதியில் 7158 சதுர மீட்டர் பரப்பில் 2 மாடி கட்டிடம் அமைய இருக்கிறது. இந்த கட்டிடத்தில் வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் 4 மாடிகள் கட்டும் வகையில் அடித்தளம் அமைக்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இருந்து நடைமேடை எண் 1, 2, 3 ஆகியவற்றிற்கு நேரடியாக செல்லும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. 4-வது நடைமேடைக்கு செல்வதற்கு மட்டும் அமையப் போகும் புதிய நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும். இருந்தாலும் கிழக்கு பகுதி கட்டிடத்தின் திறந்த வெளி வர்த்தக பயன்பாட்டு மாடி பகுதியில் இருந்து நேரடியாக நடைமேடை எண் 4 மற்றும் புதியதாக அமைய இருக்கும் நடைமேடை எண் 5-க்கும் செல்லும் வசதி அமைய இருக்கிறது.

இந்த கட்டிடத்தில் பயணிகளின் வசதிக்காக 2 எஸ்கலேட்டர்கள், 4 மின் தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன. ரெயில் நிலையத்திற்கு கூட்ட நெரிசல் ஏற்படாமல் வருகை மற்றும் புறப்பாடு பயணிகளுக்கு தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கட்டிடத்தில் பயணச்சீட்டு பதிவு மையங்கள், காத்திருப்பு அரங்கு, கழிப்பறைகள், ரெயில்வே சேவை அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் அமைய உள்ளன. வாகனங்கள் வந்து செல்ல தனிப்பகுதியும், இருபுறமும் தூண்களுடன் பாதசாரிகள் நடந்து செல்ல ராமேசுவரம் கோவில் பிரகார அமைப்பில் நடைபாதை அமைய இருக்கிறது. வாகன காப்பகங்கள் நடைமேடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன் பகுதியில் குழுவாக சுற்றுலா வரும் பயணிகள் காத்திருப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. வடக்குப்பகுதியில் அமைய இருக்கும் ஒரு மாடி கட்டிடத்தில் ரெயில்வே நிர்வாக அலுவலகங்கள் அமைய இருக்கின்றன. தற்போதைய நடைமேடைகள் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக இருக்கின்றன. மேலும் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதியுடன் கூடிய காப்பகங்கள், ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், ஓய்வு அறைகளுடன் கூடிய உப ரயில்நிலையை கட்டிடங்கள், ரயில்வே ஊழியர் குடியிருப்புகள், பயணிகள் பயன்பாட்டு பகுதியில் இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் பார்சல் அலுவலக கட்டிடம் ஆகியவை அமைய இருக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.