முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 20, 2016

சேதுபதி - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேல ராமமூர்த்தி ஒளிப்பதிவு: பி தினேஷ் கிருஷ்ணன்
இசை: நிவாஸ் பிரசன்னா
தயாரிப்பு: ஷான் சுதர்சன்
இயக்கம்: அருண் குமார்


பக்கத்து வீட்டு இளைஞன் போல பாந்தமாக வந்து போய்க் கொண்டிருந்த விஜய் சேதுபதிமெல்ல ரவுடியாக மாற முயற்சித்துஇப்போது அதிரடி போலீசாக அவதாரமெடுத்துள்ளார் சேதுபதியில். மதுரையில் ஏசி புரமோஷனுக்குக் காத்திருக்கும் இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதி இயல்பிலேயே நல்லவர்நேர்மையானவர். அழகான குடும்பம்அமைதியான வாழ்க்கை என்ற அவரது நேர்க்கோட்டில் க்ராஸ் ஆகிறார் மதுரை தாதா வேல ராமமூர்த்தி. அடுத்து உதவி கமிஷனராக பதவி உயர்வு பெறவிருக்கும் சேதுபதிக்குஒருகட்டத்தில் இருக்கிற இன்ஸ் வேலையும் பறிபோகும் சூழல். இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்கிறார் விஜய் சேதுபதி என்பது க்ளைமாக்ஸ். சரிஎதிர்ப்பார்த்த வழக்கமான போலீஸ் கதைதானே.. இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்களாஇருக்கிறது.... அதுவிஜய் சேதுபதி.. விஜய் சேதுபதி மட்டும்தான்!



முறுக்கு மீசை, நிமிர்ந்த தோள்கள், அலட்சிய தோற்றம் என வழக்கமான சினிமா போலீஸ் வேடம் என்றாலும், அதை இயல்பாக செய்த விதத்தில் கடைசி காட்சி வரை வசீகரிக்கிறார் வுிஜய் சேதுபதி. மனைவியிடம் காதலில் குழைந்து காலில் விழுவதும், குழந்தைகள் ஆசைக்காக அறை முழுக்க தண்ணீரைக் கொட்டி ஆட்டம் போடுவதுமாக ஜொலிக்கிறார். சகல பலம் பொருந்திய வேல ராமமூர்த்தியை கோவில் திருவிழாவில் வைத்து கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சி ரசிக்க வைக்கிறது. போலீஸ்காரன் மனைவியாக வரும் ரம்யா நம்பீசனுக்கு பெரிதாக வேலையில்லைதான். ஆனால் செல்ல கோபம், சிணுங்கல், கணவனைக் காலில் விழவைக்கும் ரொமான்ஸ் என அழகான ராட்சசியாக அசத்தியிருக்கிறார். வேல ராமமூர்த்திக்கு இதில் பிரதான வில்லன் வேடம். அந்த உருவத்துக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால் பொசுக்கென்று அமைந்துவிட்டது அவருக்கான க்ளைமாக்ஸ்.

எப்போதும் விஜய் சேதுபதியின் நிழலாக வரும் அந்த சுறுசுறு சப் இன்ஸ்பெக்டர், மந்த ஏட்டு, கமிஷனராக வரும் நபர், அந்த விசாரணைக் கமிஷன் அதிகாரி என அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் எந்தக் காட்சியும் புதிதாக இல்லை என்பதுதான் மிகப் பெரிய குறை. மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் தொடங்கி நாம் பார்த்த பல படங்களில் பார்த்த காட்சிகளே. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்றால் அவருக்கு ஒரு டெரர் வில்லன், அவரால் வரும் பிரச்சினைகள் என்ற வழக்கமான ஃபார்முலா கதைதானே இந்த சேதுபதியும். காட்சிகளையாவது புதிதாக யோசித்திருக்கலாமே. அதுவும் வேல ராமமூர்த்தியைக் கைது செய்த பிறகு, ஒரு பத்து நிமிடங்கள் விஜய் சேதுபதியும் அவர் மகனும் மனைவியும் வரும் காட்சிகள் மகா வெட்டி. தினேஷின் ஒளிப்பதிவில் குறையில்லை. நிவாஸ் பிரசன்னா இசையில் முதல் பாடல் ஓகே. பின்னணி இசை சில காட்சிகளில் காதுகளைப் பதம் பார்க்கிறது.


விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் பிப். 23 ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் பிப். 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.




இக்கூட்டத்தில் கோட்ட அலுவலகத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் எம்.ஜோசப் செல்வராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி!!

No comments :
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவு எந்திரம்
ராமநாதபுரம் தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலுள்ள சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் முதல்கட்ட பணியை மாவட்ட கலெக்டர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான பரமக்குடியில் 301 வாக்குச்சாவடி மையங்களும், திருவாடானையில் 321, ராமநாதபுரத்தில் 321, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 364 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,307 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக1,674 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 2,500 கட்டுப்பாட்டு கருவிகள் பீகார் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, ராமநாதபுரத்திலுள்ள தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூட சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுஉள்ளது. ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் திருவாடானை ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் பெல் நிறுவன பொறியாளர்கள் மேற்பார்வையில் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


முதல் கட்ட பரிசோதனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வருகிற 24–ந்தேதி வரை முதல்கட்ட பரிசோதனை செய்யவும், அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதி ஒருவரை அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியை விரைந்து முடித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களிடம் வழங்க அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம்பிரதீபன், தேர்தல் தாசில்தார் சுகுமாறன் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)