முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 18, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேர கொரோனா தடுப்பு ஆலோசனை மையம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேர கொரோனா தடுப்பு ஆலோசனை மையம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற ஏதுவாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது.

 

இந்த உதவி மையத்தில் சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள் 8 மணி நேர சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 





இந்த மருத்துவ குழு அலுவலர்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் குறித்து கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இந்த உதவி மையத்தை 77087 11334, 77082 92732, 77083 57835, 77089 25833 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

 

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, April 7, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பும், கண்காணிப்பு காமிரா வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை இரவு கூறியதாவது:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிகளின் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

 


வாக்கு பதிவு முடிந்த நிலையில், ராமநாதபுரம்-தேவிபட்டிணம் சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் 4 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளில் தீத்தடுப்பு சாதனங்களும் உள்ளன என்றார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,547 மையங்களலும் இரவு 8 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது. பின்னர் அவைகளை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் பணி விடிய, விடிய நடைபெற்றது. ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவைகள் கொண்டு செல்லப்பட்டன.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 69.24 சதவீதம் வாக்குபதிவு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மொத்தம் 69.24 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.

 

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி நிலவரப்படி பரமக்குடியில் 38.78 சதவீதமும், திருவாடானையில் 38.70 சதவீதமும், ராமநாதபுரத்தில் 36.09 சதவீதமும், முதுகுளத்தூரில் சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்டத்தில் மொத்தம் 37.43 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.

 


மாலை 5 மணி நிலவரப்படி பரமக்குடியில் 62.23 சதவீதமும், திருவாடானையில் 62.30 சதவீதமும், ராமநாதபுரத்தில் 50.04 சதவீதமும், முதுகுளத்தூரில் 58.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் 51.27 சதவீதமும் பேர் வாக்களித்திருந்தனர்.

 

இரவு 7 மணி நிலவரப்படி

பரமக்குடி தொகுதியில் 70.51 சதவீதம்,

திருவாடானை தொகுதியில் 68.75 சதவீதம்,

ராமநாதபுரம் தொகுதியில் 67.51 சதவீதம்,

முதுகுளத்தூர் தொகுதியில் 70.35 சதவீதம்

 

என மாவட்டத்தில் 69.24 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் மொத்த வாக்குகளில் 3 லட்சத்து 76697 ஆண்களும், 4 லட்சத்து 29,999 பெண்களும் என மொத்தம் 8,05,701 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 5 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, April 4, 2021

உதய சூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் தி.மு.க காதர்பாட்சா முத்து ராமலிங்கம்!!

No comments :

மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

 

ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் 3-ம் கட்டமாக பாம்பன், தங்கச்சி மடம், மரைக்காயர் பட்டிணம், வேதாளை, சாத்தக்கோ வலசை உள்பட பல கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற் கொண்டார். ஊர் பிரமு கர்கள் மற்றும் இளைஞர்கள் அவரை கிராமத் திற்குள் குதிரையில் அழைத்து சென்று வரவேற்பளித்தனர். கிராம பகுதியில் விளை யாடிக்கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து காதர்பாட்சா முத்துராம லிங்கம் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார். பல கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பேரணி யாக சென்று வாக்கு சேகரித்தார். 

 


வாக்காளர்கள் மத்தியில் காதர்பாட்சா முத்துராம லிங்கம் பேசியதாவது:- 

 

தமிழகம் தலை நிமிர, தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடம் கிடைக்க,அனைவரும் பிரிவினை இன்றி சம உரிமையுடன் சமத்துவமாக வாழ, அனைத்து துறை களிலும் பாழ்பட்டு கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க தலைவர் ஸ்டாலின் தலை மையில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழினம் காப்பாற்றப்படும் என்பதை ஒவ்வொரு வாக் களரும் மனதில் வைத்து வரும் 6ந் தேதி உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்களின் மானத்தை, சுயமரியா தையை,  அடிப்படை உரிமைகளை காக்க, தமிழ் மொழி, கலாச்சாரம், பண் பாட்டை காக்க மவுன புரட்சி நடத்தி  தி.மு.க. வை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டனர் என்பது செல்லும் இடமெல்லாம் மக்களின் உணர்வுகளில் தெரிகிறது.

 

அதேபோல ராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக  என்னை வெற்றி பெறச் செய்யுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். தனுஷ்கோடி தென் கடலில் தூண்டில் வளைவு துறைமுகம், மீனவகிராமங் களில் சமுதாய கூடங்கள், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி, தடையற்ற மின் வினியோகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறை வேற்றித்தர உறுதி கூறுகிறேன்.காவிரி குடிநீர் அனைத்து பகுதிக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் மற்றும் சுயஉதவி குழுவி னருக்கு அரசின் நிதி மற்றும் கடன் உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனை வரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசி னார். அவருடன் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக உடன் சென்றனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.