Friday, June 24, 2022
ராமநாதபுரத்தில் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரத்தில்
பட்டணம்காத்தான் பகுதியில் கட்டப்பட்டுள்ள வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில்
வீடுகளைப் பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம்கள் வரும் 28, 29 (செவ்வாய், புதன்) ஆகிய
தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம்
பட்டணம்காத்தான் பகுதியில் 264 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
வீடுகள்
ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளன.
நகர்ப்புற
வீடற்ற, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன.
இதில்
பயனடைய விரும்புபவர்கள் வரும் 28 மற்றும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் பங்கேற்கலாம்.
பயனாளிகள்
ரூ.5 ஆயிரத்துக்கான கேட்பு வரைவோலையை செயற்பொறியாளர்,
தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
என்ற
முகவரிக்கு விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
Thursday, June 23, 2022
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 27ம் தேதி எரிவாயு முகவர்களுக்கான குறைதீர் கூட்டம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் எரிவாயு முகவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 27 ஆம் தேதி (திங்கள்கிழமை)
நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி,
கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம்
தொடர்பான குறைகளை மக்கள் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில், குறைதீர்க்கும் கூட்டம்
நடைபெறவுள்ளது.
ஜூன்
27 மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறவுள்ள
இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.
அதில்,
எண்ணெய் நிறுவன நிர்வாகிகள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்கின்றனர்.
எனவே,
சமையல் எரிவாயு பயன்படுத்தும் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாகத் தெரிவித்து பயன்பெறலாம்
என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, June 22, 2022
ராமநாதபுரத்தில் ஜூன் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!
ராமநாதபுரம்
வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வழக்கமாக வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமானது,
வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரான செ. மதுகுமார் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக்
குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வாரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் தனியார் வேலைவாய்ப்பு
முகாம் நடைபெற்று வருகிறது. அதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தோர் முதல் பட்டதாரிகள்
வரையில் தகுதிக்கு ஏற்ப தனியார் துறையினர் தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்து
பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில்,
ஜூன் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நடைபெறுவதால்,
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு
முகாமை, வியாழக்கிழமை (ஜூன் 23) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே,
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை,
குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வியாழக்கிழமை காலையில், ராமநாதபுரம் பட்டினம்காத்தானில்
உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில், பொதுவான பொறியியல் பட்டப்படிப்பில்
சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோ. ஜெகன் செவ்வாய்க்கிழமை
விடுத்தள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்-தேவிபட்டினம்
சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பொறியியல் பட்டப்படிப்பில்
சேருவோர் விண்ணப்பிக்கும் வகையில் இணையதள சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
பொறியியல் பட்டப்படிப்பில் சேருவோருக்காக அமைக்கப்பட்ட 110 மையங்களில், இக்கல்லூரி
வளாக மையமும் ஒன்றாகும். எனவே, இக்கல்லூரி வளாகத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி, தினமும்
காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.
விண்ணப்பிக்க
விரும்புவோர், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து கல்லூரிக்கு நேரில்
வரவேண்டும். உரிய அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, June 21, 2022
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-ம் இடம்!!
பிளஸ்-2
தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-ம் இடமும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்
5-வது இடமும் பெற்றுள்ளது என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
பிளஸ்-2
மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையால்
நேற்று வெளியிடப்பட்டது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி
பெற்று மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 3-வது இடத்தை பிடித்து உள்ளனர்.
அதேபோல
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவிலான தேர்ச்சி
சதவீதத்தில் 5-வது இடத்தை பிடித்து உள்ளனர்.
பிளஸ்-2
பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி தொடங்கி
28-ந்தேதி
வரை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,800 மாணவர்கள், 7,509 மாணவிகள் என
மொத்தம் 14,309 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 6,499 மாணவர்கள், 7,383
மாணவிகள் என மொத்தம் 13,882 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம்
வகுப்பு அதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,133 மாணவர்களும் 8,226 மாணவிகளும் என
16,359 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 7,413 மாணவர்களும், 8,012 மாணவிகளும்
என மொத்தம் 15,425 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும்
மாவட்டத்தில் தேர்வு எழுதிய 32 மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
70 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 5,446 மாணவ, மாணவிகளில் 5,165 ேபர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அடுத்து வரும் பொதுத்தேர்வில் முதல் இடம் வருவதற்கான அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்தார்.
Saturday, June 18, 2022
ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக திரு. ஜானிடாம் வர்கீஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்!!
ராமநாதபுரம் புதிய
கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜானிடாம் வர்கீஸ் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு
முக்கியத்துவம் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
பணி பொறுப்பு
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த சங்கர்லால் குமாவத் மாற்றப்பட்டு அவருக்கு
பதிலாக மாவட்டத்தின் 26-வது கலெக்டராக ஜானி டாம் வர்கீஸ் நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து
நேற்று பிற்பகலில் அவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு மக்களுக்காக
செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங் களும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு முழுமையாக
போய் சேருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்வேன். குறிப்பாக இந்த மாவட்டத்தின்
குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து அனை வருக்கும் தடையின்றி குடிநீர்
கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
ராமநாதபுரம் மாவட்டம்
மத்திய அரசின் வளர்ந்து வரும் முன்னோடி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்கான
திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த ராமநாதபுரம் மாவட் டத்தில் கலெக்டராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடை கிறேன்.
இந்த மாவட்டத்தில் தலைநகரில் அரசுப்பள்ளி இல்லை என்பதால் அரசின் கவனத்திற்கு கொண்டு
சென்று நடவடிக்கை எடுப்பேன்.
குழந்தை திருமணங்களை
தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு உள்ள
ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் துறையில் நான் பணியாற்றி வந்து உள்ளதால் அந்த துறையில் உள்ள திட்டங்களை
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்க செய்வேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,
மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், உதவி அலுவலர் வினோத் உடன் இருந்தனர்.
செய்தி: தினசரிகள்
Wednesday, June 15, 2022
ராமநாதபுரத்தில் நடைபெறும் ”மொபைல் செர்வீஸ்” இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரத்தில்
நடைபெறவுள்ள கைப்பேசி பழுதுநீக்கும் பயிற்சியில் பங்கேற்ற விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை
வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில்
ஆண்களுக்கு கைப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி 30 நாள்கள் அளிக்கப்படவுள்ளது.
தினமும்
காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை அளிக்கப்படும்.
பயிற்சி
இலவசமாக அளிக்கப்படுவதால், சேர விரும்புவோர் ஜூன் 20 ஆம் தேதி முதல் ராமநாதபுரம் புதிய
பேருந்து நிலையம் அருகே பூமாலை வணிக வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக
சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம்.
பயிற்சியில்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது முதல் 45 வயது வரையிலுள்ள ஆண்கள் மட்டும்
பங்கேற்கலாம்.
மேலும்
தகவல்களுக்கு 8056771986 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, June 14, 2022
கீழக்கரையில் நடைபெற்ற மின்னொளி ஜூனியர் வாலிபால் போட்டி!!
கீழக்கரையில் ஜீனியர் மைஃபா முதல் வாலிபால் போட்டிகள்
விமர்சையாக நடைபெற்றது, 20 அணிகள் கலந்து கொண்ட
இந்த போட்டியில் சித்தார்கோட்டை அணி முத்லிடம் பெற்றது.
மை ஃபா அணி இரண்டாம் இடத்தையும், மாயாகுளம் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழ்ங்கி ஊக்கப்படுத்தினர்.
முதல் பரிசு ரூபாய் :5000
வழங்கியவர் மூர் டிராவல்ஸ் மற்றும் கண்மணி அலி;
இரண்டாம் பரிசு ரூபாய் : 3000
வழங்கியவர் பிளாக் & ஒயிட் லுங்கீஸ் மற்றும் ST கொரியர்ஸ்;
மூன்றாம் பரிசு ரூபாய் :1000
வழங்கியவர் F2 ஃபேஷன்;
முதல் பரிசு சுளர் கோப்பை
வழங்கியவர் TS7 பூட்வேர் & மென்ஸ் வேர்;
இரண்டாம் பரிசு சூழற் கோப்பை
வழங்கியவர் HABIBI tarders
மூன்றாம் பரிசு வழங்கியவர் மலாய் ரெஸ்டாரன்ட்.
ஜெர்ஸி பனியன்கள் வழ்ங்கியவர்: க்ரெளன் ட்ரேடிங் ஏஜென்சி
விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.
செய்தி: கீழை ஹமீது ராஜா, பயிற்சியாளார்
Thursday, June 9, 2022
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக 11 இடங்களில் சிறப்பு முகாம்கள்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்காக 11 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஜூன் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)
தொடங்கி நடைபெறுவதாக, ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை
விடுத்த செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளிகளுக்கு
அனைத்து வகை உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான அனைத்துத் துறை
நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஜூன் 14 ஆம் தேதி காலை 10 முதல், மாவட்டத்தில் 11
இடங்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகின்றன.
அதன்படி,
ஜூன் 14 ஆம் தேதி போகலூர்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
15 இல் பரமக்குடி,
16 இல் நயினார்கோவில்,
17 இல் முதுகுளத்தூர்,
18 இல் கமுதி,
21 இல் கடலாடி,
22 இல் ஆர்.எஸ்.மங்கலம்,
23 இல் திருவாடானை,
24 இல் திருப்புல்லாணி,
28 இல் மண்டபம்,
29 இல் ராமநாதபுரம்
ஆகிய இடங்களில் இந்த சிறப்பு
முகாம்கள் நடைபெறுகின்றன.
இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான
தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டைப் பதிவு, முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு,
உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கான பதிவு ஆகியவை நடைபெறும். எனவே,
இம்முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள்
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 4, குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல், இருப்பிடச்
சான்று நகல் ஆகியவற்றை கொண்டுவரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் ஜூன் 18 ஆம் தேதி இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் ஜூன் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து கலை, பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் விடுத்துள்ள
செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்
வெளிப்பட்டினத்திலுள்ள டிடிவிநாயகர் பள்ளி வளாகத்தில் ஜூன் 18 ஆம் தேதி இளைஞர்களுக்கான
கலைப் போட்டிகள், மாவட்டக் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறுகின்றன.
இப்போட்டிகளில்
17 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம்,
கிராமிய நடனம் மற்றும் ஓவியம், ஆகிய பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறும்.
குழு
போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை . தனிநபராக 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்தலாம்.
குரலிசைப்
போட்டி, நாகசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின்,
கிதார், சாக்ஸஃபோன், கிளாரினெட், தமிழ் பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
மேலும்,
தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளில்
சேருவோர் 5 தாளங்களில் வாசிக்க தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம்.
பரதநாட்டியத்தில்
3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்துவோர் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில்
கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம்,
மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மலை மக்கள் நடனம் ஆகியவை அனுமதிக்கப்படும்.
இப்போட்டியில்
பங்கேற்க விரும்புவோர், கலை, பண்பாட்டுத் துறை இணையதளத்தில் தங்களது பெயரை பதிவிடலாம்.
மேலும் தகவல்களுக்கு 98425 96563 என்ற கைப்பேசி அல்லது 94522 566420 என்ற மதுரையில்
உள்ள கலை பண்பாட்டுத் துறை அலுவலகத்தையும் தொடர்புகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Friday, June 3, 2022
மானியத்துடன் கூடிய "பம்ப் செட்" பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழக
அரசின் மானியத்துடன் கூடிய மின்சார நீர் இறைப்பு இயந்திரம் (பம்ப் செட்) பெறுவதற்கு
விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசால் மானியத்துடன்
கூடிய மின்சார நீர் இறைப்பு இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தில்
சேர விரும்பும் சிறு, குறு விவசாயிகள் அடங்கல்
10-1,
கிணறு அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கிப்புத்தக முதல் பக்கம்
நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் கருவூல அலுவலகம் அருகேயுள்ள வேளாண்மை பொறியியல்
துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
பரமக்குடி,
நயினார்கோவில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி, கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடியில்
சௌகத் அலி தெருவிலுள்ள வேளாண்மைப் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும்,
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், இரண்டாவது
தளத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் அலுவலக செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றிலும்
விண்ணப்பிக்கலாம்,
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
Friday, April 22, 2022
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!!
இலவச
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி,
கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை யற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட
மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 2022-23-ம் கல்வியாண்டிற்கு குழந்தைகளுக்கான
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் 155 பள்ளிகளில்
1817 இடங்களுக்கு இணையதள வாயிலாக விண்ணப்பித்து மாணவ, மாணவிகள் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்
என்று பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதன்படி பள்ளிகளில் எல்.கே.ஜி.வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் மே 18-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்.
மாவட்ட,
வட்டார கல்வி அலுவலகங்கள், அந்தந்த பள்ளிகள் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றலாம்.
விண்ணப்பத்துடன் போட்டோ, சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், தாய், தந்தையின் ஆதார்
அட்டைகள், இருப்பிட சான்று, ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, வருமான சான்று ஆகியவற்றை
பதிவேற்ற வேண்டும்.
ரூ.2
லட்சத்திற்குள் வருவாய் உள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்கள்,
மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர்
விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்து
உள்ளனர்.
Tuesday, April 12, 2022
ராமேசுவரத்தில் போலீசார் வாகனத்தை அனுமதிக்காததால், பெண் ஒருவர் உயிரிழந்தார்!!
மகாராஷ்டிரா மாநிலம் டேஸ் முக் நகர் பகுதியில் இருந்து ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சந்தா பாய் (வயது72) ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர்.
தெற்கு
ரத வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த இவர்களில் சந்தா பாய்க்கு திடீரென்று
நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அந்த
தங்கும் விடுதியில் இருந்து போலீசார் தடுப்பு பகுதிக்கு வந்து ஆட்டோ அல்லது வேறு ஏதாவது
ஒரு வாகனத்தை அனுமதிக்குமாறும் அவரது குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.
ஆனால்
போலீசார் எந்த வாகனத்தையும் அனுமதிக்கவில்லை.
இதனால்
ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்து சேர்ந்தது. பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சிறுது நேரத்துக்கு முன்னதாக இறந்ததாக
தெரிவித்தார்.
பின்னர்
அந்த பெண்ணின் உடலை சொந்த மாநிலத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.
போலீசார்
உடனடியாக வாகனத்தை அனுமதித்திருந்தால் இந்த இறப்பை தவிர்த்திருக்கலாம் என்று அந்தப்
பகுதி மக்கள் கூறினார்கள்.
செய்தி:
தினத்தந்தி
Saturday, April 9, 2022
ராமநாதபுரத்தில் ஏப்-19 ஆம் தேதி பேச்சுப் போட்டிகள்; முதல் பரிசு ரூ.5 ஆயிரம்!!
அம்பேத்கர் பிறந்த
நாளையொட்டி ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள்
ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட
ஆட்சியர் சங்கர்லால்குமாவத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அம்பேத்கர் பிறந்த
தினத்தையொட்டி வரும் ஏப். 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்
போட்டிகள் நடைபெறவுள்ளன.
ராமநாதபுரம் நகரில்
உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில்
வெற்றி பெறுவோருக்கு
முதல் பரிசாக
ரூ.5 ஆயிரம்,
இரண்டாம் பரிசாக
ரூ.3 ஆயிரம்,
மூன்றாம் பரிசாக
ரூ. 2 ஆயிரம் என தனித்தனியாக வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்கும்
அரசுப் பள்ளி மாணவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
பள்ளி அளவில்
30 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளனர். ஆகவே, மாவட்ட, முதன்மைக் கல்வி
அலுவலரைத் தொடர்புகொண்டு பேச்சுப் போட்டியில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஒரு கல்லூரியில்
இருந்து 2 பேர் மட்டுமே பங்கேற்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, April 5, 2022
மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?!!
மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காலை, மாலை என இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
கூடுதலாக
ரயில்கள் இயக்க வேண்டும் என வியாபாரிகள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு தற்போது இரண்டு சிறப்பு ரயில் தினந்தோறும் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து மாலை 6:10மணிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து காலை 5:40மணி சிறப்பு ரயில்கள் புறப்படுகிறது.
ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு தினமும் காலை 6:50 மணிக்கும், ராமேஸ்வரத்திற்கு இரவு 8:40 மணிக்கும் செல்கிறது. இவ்வழிதடத்தில் ஏற்கனவே தினமும் ஆறுமுறை ரயில்கள் இயக்கப்பட்டன.
தற்போது இருமுறை மட்டும் இயங்குவதால் தொழிலாளர்கள், அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை. ஆகையால் வியாபாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் வசதிக்காக மதுரையிலிருந்து காலையிலும், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை நேரங்களில் கூடுதலாக ரயில் இயக்க தென்னக ரயில்வே முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Monday, April 4, 2022
ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான வைரம் பறிமுதல்; ஒருவர் கைது!!
ராமநாதபுரத்தில்
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டை தீட்டப்படாத 160 கிராம்
வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கீழக்கரையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரை பகுதியில் இருந்து ராமநாதபுரம் வழியாக விற்பனைக்காக விலை உயர்ந்த
சிலை, வைரம் முதலியவை கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிற்கு
ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை
தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், சரவணன்
ஆகியோர் ரெயில்வே கேட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்
சைக்கிளில் அமர்ந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் புகைபிடித்து கொண்டிருந்தவரை விசாரிக்க
முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். போலீசார் விரட்டி
மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர் கீழக்கரை புது கிழக்குத்தெரு யூசுப் சுலைமான் (வயது 36) என்பது தெரிந்தது.
மேலும்
சோதனையிட்டபோது அவர் வைத்திருந்த துணிப்பையில் சிறிய கற்கள் போன்று இருந்தது. மேலும்
சிறிய கருவி போல் ஒன்றும் வைத்திருந்தார். அதுகுறித்து கேட்டபோது முன்னுக்குபின் முரணாக
பதில் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த
விசாரணையில் அவை வைரகற்கள் என்றும், கீழக்கரையில் இருந்து வாங்கி வந்துள்ளதாகவும்,
தான் ஒரு வியாபாரி என்றும் தெரிவித்துள்ளார். வியாபாரிக்கான ஆவணத்தை கேட்டபோது இல்லை
என்றதால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர்
அந்த கற்களை ஒரு நகை கடையில் சோதித்தபோது அது வைரம் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
2 கவர்களில் மொத்தம் 160.9 கிராம் வைர கற்கள் இருந்தது. அவர் வைத்திருந்த சிறிய கருவி
வைரத்தை தரம் பரிசோதிக்கும் கருவி என்பது தெரிந்தது.
இதையடுத்து
திருச்சியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அந்த
வைர கற்களை பரிசோதித்ததில் தோண்டி எடுக்கப்பட்ட பட்டை தீட்டப்படாத சுத்தமான வைரம் என்று
அறிக்கை பெறப்பட்டது. இந்த வைரங்களின் மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
யூசுப்
சுலைமானிடம் விசாரித்தபோது கீழக்கரையில் கோழிக்கறி கடை வைத்து வியாபாரம் செய்யும் சுல்தான்
மற்றும் அசார் ஆகியோரிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இவரை வைத்தே அவர்களிடம்
பேசியபோது சர்புதீன் என்பவரிடம் வாங்கியதாக தெரிவித் துள்ளார். இதனால் தனிப்படை போலீசார்
அவர்களை தேடி சென்றுள்ளனர்.
இவர்களிடம்
பெறும் தகவலின் அடிப்படையிலேயே இந்த வைரம் உண்மையில் யார் கொடுத்து அனுப்பியது, அவர்களுக்கு
எங்கிருந்து வந்தது, இதனை யாருக்காக கொடுத்து அனுப்பினார்கள் என்பது போன்ற விவரங்கள்
தெரியவரும்.
முதல்கட்ட
விசாரணையில் இந்த வைரம் ரஷியா பகுதியில் இருந்து வாங்கி வந்திருக்கலாம் என்றும், அங்கு
போர் நடந்து வருவதால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த வைரம் கொடுத்தனுப்பப்பட்டு
இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பொதுவாக ரஷியாவில் தான் அதிக அளவிலான வைரம் வெட்டி
எடுக்கப்படுவதாகவும் அந்த வைரத்திற்கு தான் மதிப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
வைரம்
வைத்திருப்பதற்கு உரிய ஆவணங்களை காட்டினால் ஒப்படைத்து விடுவதாகவும், இல்லாவிட்டால்
இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில்
ரூ.1 கோடி வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: தினத்தந்தி
Thursday, March 31, 2022
ராமநாதபுரம் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம், ராமநாதபுரம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் மாநிலம் மற்றும்
மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம அளவிலான சுயஉதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான
கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில்
உள்ள சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மணிமேகலை
விருது வழங்கப்பட உள்ளது.
ஆகவே
2021-2022-ஆம் ஆண்டுக்கான விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் நகராட்சி, பேரூராட்சி சமுதாய
அமைப்பாளர்களிடமும்,
ஊரக
பகுதிகளில் உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாளர்களிடமும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும்.
Wednesday, March 30, 2022
போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர்!!
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,
ரயில்வே தேர்வுவாரியம்,
பணியாளர் தேர்வு குழுமம்,
வங்கி பணியாளர் சேவைகள் குழுமம்
உள்ளிட்ட பல்வேறு மத்திய மற்றும் மாநில பணிகளுக்கான
போட்டி தேர்வுகளுக்காக தயாராகி கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டித்தேர்வு
பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கிராமப்புறத்தில்
இருந்து நகரத்திற்கு வந்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத சூழலில் உள்ளவர்கள்,
தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே அரசுப்பணிக்கு தயார்படுத்தி கொள்ளும் இளைஞர்கள்
தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தவாறே தங்களை தயார் செய்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
கல்வி
தொலைக்காட்சியில் போட்டி தேர்வுக்கான பாட வகுப்புகளின் ஒளிபரப்பு தமிழக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தநிகழ்ச்சி
தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு அன்றைய தினம் இரவு
7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்பாகிறது.
போட்டி
தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் கல்வி தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியினை
கண்டு பயன் பெறுமாறு ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
Tuesday, March 29, 2022
கீழக்கரையில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள்; CVC, MSEC அணிகள் பரிசுகளை வென்றன!!
Saturday, March 26, 2022
குப்பை கூடமாக காட்சி தரும் ராமநாதபுரம் மருத்துவமனை வளாகம்!!
ராமநாதபுரம்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்த பொருள்கள் குப்பை போல் குவித்து
வைக்கப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோயாளிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் வளாகம் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக
செயல்படுகிறது. இங்கு தினமும் சுமார் 700 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள்
562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில்
மருத்துவர்களின் எண்ணிக்கை 62 லிருந்து 108 ஆகவும், செவிலியர்களின் எண்ணிக்கை 160 லிருந்து
233 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
அரசு மருத்துவமனையில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே பழுதடைந்த பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு
ஆங்காங்கே குப்பை போல குவிக்கப்பட்டுள்ளன. இந்த பொருள்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்காததால்
தற்போது 350-க்கும் மேற்பட்ட இரும்புக் கட்டில்கள், மெத்தைகள் மற்றும் ஆடைகளைத் தூய்மையாக்கும்
நீராவி இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன.
ரத்தச்
சுத்திகரிப்புப் பிரிவு அருகே குவிக்கப்பட்ட பழைய பொருள்களால் சிறுநீரக நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள கழிப்பறைகளையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர்
மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிக்கு அடியில் குவிக்கப்பட்டுள்ள பழைய பொருள்களால் தொட்டியின்
தூண்கள் சேதமடைந்துள்ளன. ஆகவே தொட்டி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக
பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரும்புக்
கட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் துருப்பிடித்ததால் அவை கழிவு நீர் குழாய்களில் அடைப்பை
ஏற்படுத்துவதாகவும், கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும்
நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தூய்மை
இந்தியா திட்டத்தில் மத்திய அரசின் சிறப்பு நிதி ரூ.6 கோடி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு
வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட நிதியை சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிக்கு செலவிட
உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில்,
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையே குப்பைகளால் சுகாதாரச்சீர்கேடு அடைந்திருப்பது வேதனை
அளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக
மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, பழைய பொருள்களை அப்புறப்படுத்த நடவடிக்கைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
செய்தி
& படம் : தினமணி
Wednesday, March 23, 2022
தரமற்ற அரிசி விநியோகம்; இருவர் பணியிடை நீக்கம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு விநியோகித்ததாக நியாயவிலைக் கடை பணியாளர்கள்
இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சாயல்குடியில்,
ராமநாதபுரம் மொத்த விற்பனை பண்டகசாலை கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடை (எண் 5) உள்ளது.
இக்கடையில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.
புகார்
குறித்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் கோவிந்தராஜன் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில்
நியாயவிலைக் கடை நகர்வுப் பணியாளர் மோகன் மற்றும் விற்பனைப் பணியாளர் வில்வதுரை ஆகியோர்
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.