முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 23, 2022

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 27ம் தேதி எரிவாயு முகவர்களுக்கான குறைதீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு முகவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 27 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகளை மக்கள் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில், குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

 


ஜூன் 27 மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.

அதில், எண்ணெய் நிறுவன நிர்வாகிகள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்கின்றனர்.

 

எனவே, சமையல் எரிவாயு பயன்படுத்தும் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாகத் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.