முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 11, 2018

பாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 104 ஆண்டுகளை கடந்த பாம்பன் ரெயில் பாலம் வழியாக ரெயில் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த 4–ந் தேதி அன்று சில இடங்களில் விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதி உடனடியாக சீரமைக்கப்பட்டாலும் தூக்குப் பாலத்தை முழுமையாக பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இந்தநிலையில் 6 நாட்களுக்கு பிறகு பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கின. அதற்காக பெரிய ஜெனரேட்டர், டிராலி மூலம் கொண்டு வரப்பட்டு தூக்குப் பாலம் அருகே உள்ள நடை பாதையில் வைக்கப்பட்டு உள்ளது.



சீரமைப்பு பணிக்காக திருச்சியில் இருந்து ஏராளமான தொழிலாளர்களும் வந்துள்ளனர். விரிசல் விழுந்துள்ள இரும்பு இணைப்புகளில் புதிய தகடுகளை பொருத்தி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பகலில் மட்டுமே நடைபெறும் இந்த பணிகளை இன்னும் ஓரிரு நாளில் இருந்து இரவிலும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். வெல்டிங் செய்யும் பணிகள் முழுமையாக முடிந்த பின்பு தூக்குப் பாலத்தில் புதிதாக அலுமினிய பெயிண்ட் அடிக்கப்படும். தூக்குப் பாலத்தின் பராமரிப்பு பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: தினதந்தி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, December 10, 2018

கீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு!!

No comments :

 தபால் அலுவலக சாலையில் மாடி பகுதியில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி தற்போது கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் சித்தி விநாயகர் கோவில் எதிர்புறம் இம்பாலா சுல்தான் காம்ப்ளக்சில்
மாற்றப்பட்டு புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

இஸ்லாமிய பைத்துல் மால் செயலாளர் அப்துல் மலீக் திறந்து வைத்தார்.வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையை காம்ப்ளக்ஸ் உரிமையாளர் இம்பாலா சுல்தான் திறந்து வைத்தார்.




இந்த நிகழ்ச்சியில், கீழக்கரை DSP, கீழக்கரை ரோட்டரி சங்கத்தினர், அ.தி.மு.க பிரமுகர் இம்பாலா உசைன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வங்கியின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது!!

No comments :
ஆம்புலன்ஸ் 108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கு இன்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்
செல்வன் கமுதியில் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது:

மெடிக்கல் டெக்னீசியன் பணிக்கு இளங்கலை அறிவியல் படிப்பான தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பையாலஜி, பையோ- கெமிஸ்ட்ரி, அல்லது 'பிளஸ் 2' தேர்ச்சியுடன், 2 ஆண்டுகள் நர்சிங் அல்லது 3 ஆண்டு நர்சிங், அல்லது இளங்கலை நர்சிங் படித்திருக்க வேண்டும்.

19- 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

13,650 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன லைசென்ஸ், மூன்றாண்டுகளுடன் 'பேஜ் லைசென்ஸ்' பெற்று, ஓராண்டு நிறைவு பெற்றிருக்கவேண்டும்.

24- 35 வயதிற்குள் தேவை.

13,100 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

கூடுதல் தகவலுக்கு 73977 24828, 73974 44156 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, December 9, 2018

கீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்!!

No comments :
மத்திய அரசின் 'டிராய்' என்ற தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் குறை கேட்பு முகாம் கீழக்கரையில் நாளை(டிச.10) நடக்கிறது.

கீழக்கரை உசைனீயா மகாலில் நடக்கும் முகாமில், அன்றாடம் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களில் உள்ள குறைகளை
வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்கலாம்.



ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட அனைத்து கம்பெனி நெட்ஒர்க்கிலும் உள்ள குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள், சமூக நல அமைப்புகள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை கீழக்கரை நுகர்வோர் சங்கம், மக்கள் டீம் அமைப்பினர் செய்து வருகின்றனர்.


செய்தி: கீழை தாஹீர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, December 6, 2018

ஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் அச்சடிப்பிரம்பு ஐந்திணை மரபணு பூங்காவில் எல்லா வசதிகளும் இருந்தும் எதுவும் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளன.

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அச்சடிபிரம்பு கிராமத்தில் 10 ஏக்கரில் 7 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
உருவாக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா தோட்டக்கலைத் துறை சார்பில் மூன்று ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்கா நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பூங்கா நடைபாதையில் கற்கள் பெயர்ந்து, தண்ணீர் தேங்கி, பாசி படிந்துள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.
இங்கு அமைக்கபட்டிருக்கும் குடில்களின் மேற்கூரை சேதமடைந்து கந்தலாகிப் போனது. 

நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் மட்டும் மக்கள் இங்கு வருகிறார்கள்.

பல கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட பூங்காவிற்கு பயணிகள் வருகையை அதிகப்படுத்த மக்களை கவரும் வகையில் பூங்காவை
சிரமைத்து, நவீனப்படுத்த வேண்டும், என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்!!

No comments :
ராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் அனைத்து ரெயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தின் தான் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தூக்கு பாலத்தின் மையப்பகுதியில் இணைப்பு கம்பிகளில் திடீரென சுமார் 20 அடி நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் ராமேசுவரம்–மண்டபம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் மீண்டும் இயக்கப்பட்டன. காலையில் ராமேசுவரம் வந்த சென்னை ரெயில்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன.

ரெயில்வே அதிகாரிகள் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு பாம்பன் ரெயில் பாலத்திற்கு வந்து பார்வையிட்டார். 

சுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பின்னர் மண்டபத்தில் இருந்து என்ஜின் மட்டும் 5 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் பாம்பனில் இருந்து 15 கிலோ மீட்டர் வேகத்தில் மீண்டும் அந்த என்ஜினை பாலத்தில் இயக்கினர். அதன் பின்னர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரெயில் பெட்டிகளும் மெதுவாக பாம்பன் ரெயில்பாலம் வழியாக மானாமதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு கூறியதாவது:– பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல்கள் சரி செய்யப்பட்டு விட்டது. இருந்தாலும் அதன் உறுதி தன்மையை கருவி மூலம் ஆய்வு செய்வதற்காக சிறப்பு அதிகாரிகள் வர உள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர் தான் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது இந்த தூக்குப்பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படமாட்டாது.

ராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல மறு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்படும். புதிய பாலம் கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார். 

ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. மண்டபம் வரை ரெயில்கள் இயக்கப்படுவதால் ரெயில்களில் வரும் பயணிகள் இறங்கி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு பஸ்களில் சென்றுவருகின்றனர். ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படும் வரை மண்டபத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, December 4, 2018

இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு - கலெக்டெர்!!

No comments :
இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு வருகிற 9–ந்தேதி முதல் 14–ந்தேதி வரை நெல்லை அண்ணா அரங்கத்தில் குரூப் ஒய் பிரிவில் ஏர்மேன் பணிக்கான ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.
இதற்கு 10–ம் வகுப்பு, பிளஸ்–2 அல்லது அதற்கு இணையான தகுதியும் 50 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 14.7.1998 – 26.6.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
மேலும் 7 பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், விணணப்பதாரர் பெயர், புகைப்படம் எடுத்த தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் மற்றும் தாசில்தாரிடம் இருந்து இருப்பிடச்சான்று பெற்றிருக்க வேண்டும்.



இதில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் எழுத்து தேர்வுக்கு தேவையான எழுதுபொருட்களை எடுத்துச்செல்ல வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களை சேர்ந்தவர்கள் வயது, தகுதியின் அடிப்படையில் இந்திய விமானப்படைக்கு சேர்வதற்கு இந்த ஆள்சேர்ப்பு திரளணியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களை ராமநாதபுரம் முன்னாள் படைவீரர் நல இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)