முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 16, 2018

10, +2 மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் மூலமாக வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்து அடையாள அட்டை பெறலாம் - கலெக்டர்!!

No comments :
10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக 2011–ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுஉள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியாது நேரடியாக இத்துறையின் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தியமையால், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது 2018–ம் ஆண்டிற்கான பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.


இதைத்தொடர்ந்து 30–ந்தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்தவசதியை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.

மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in தங்கள் அளவிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம். எனவே மாணவர்கள் ஏற்கெனவே 10–ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்து இருப்பின் அந்த வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தாங்கள் படித்த பள்ளிகளை அணுகி பிளஸ்–2 கல்வித்தகுதியை கூடுதலாக பதிவு செய்து கொள்ளலாம்.

பிளஸ்–2 தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம்.


இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

என்சிசி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி நாள் 10.09.2018!!

No comments :

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்ட், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் வரும் 10-09-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 05

பணி: ஓட்டுநர் காலியிடம்: 01 சம்பளம்: ரூ.19,500-62,000
பணி: ஸ்டோர் அட்டெண்ட் காலியிடம்: 01 சம்பளம்: ரூ.15,900-50,400 பணி: ஆபிஸ் அஸிஸ்டென்ட் காலியிடம்: 02 சம்பளம்: ரூ.15,700-50,000 பணி: போட் லஸ்கர் காலியிடம்: 01 சம்பளம்: ரூ.15,900-50,400

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆபிஸ் அஸிஸ்டென்ட் பணிக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். போட் லஸ்கர் பணிக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Commander,
NCC Group Headquarters,
Madras 'B', Chennai.


பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 10.09.2018. 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)