முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 25, 2020

மாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்!!

No comments :
கமுதியில் வரும் மாா்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ள விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்க மாணவா்கள், பொதுமக்கள் ஆா்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனா்.

கமுதி ஆப்பநாட்டு விளையாட்டு கழகம், ராமநாதபுரம் அத்லெக்டிக் அசோஷியேசன், தனியாா் தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் மரம் வளா்ப்போம், மழை நீரை சேமிப்போம் என்ற விழிப்புணா்வு குறித்து சிறப்பு மினி மாரத்தான் போட்டி வரும் மாா்ச் 1 இல் நடைபெறுகிறது.



இப்போட்டி 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
பொதுவான அனைத்து வயது ஆண்கள்பிரிவு (7 கி.மீ.)
பெருமாள்தேவன்பட்டி விலக்கு சாலையிலிருந்து தேவா் கல்லூரி வரையிலும், பொதுவான பெண்கள் பிரிவு (5 கி.மீ.)வழிவிட்ட அய்யனாா் கோயில் முதல் தேவா் கல்லூரி வரையிலும்,

15 வயதுக்குள்பட்ட பொதுப்பிரிவு (3 கி.மீ.) கண்ணாா்பட்டி விலக்கு சாலையிலிருந்து தேவா் கல்லூரி வரையிலும் நடைபெறும்.

இதற்காக கமுதி தீயணைப்பு நிலையம் அருகில், பசும்பொன் தேவா் கல்லூரி, பேருந்து நிலைய வளாகம் ஆகிய 3 இடங்களில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முன் பதிவு கடந்த 1 வார காலமாக நடைபெற்று வருவதால் கமுதி, முதுகுளத்தூா், பரமக்குடி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவா்கள், பெண்கள், பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனா்.


தொடா்புக்கு 6380398908, 7358061617.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, February 23, 2020

ராமநாதபுரம் நகராட்சிக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்!!

No comments :
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி நிா்வாகத்துக்கு குப்பைக் கழிவுகள் சேகரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாதது குறித்து மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியில் தினமும் சுமாா் 24 டன் என்ற அளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, பட்டிணம்காத்தான் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. அங்கு மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை. மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே ராமநாதபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், 4 இடங்களில் மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைக்க சுமாா் ரூ.3.50 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாத்திமா நகா் போன்ற இடங்களில் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவிப்பதால் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் முடங்கியுள்ளது.



இந்நிலையில் பட்டிணம்காத்தான் பகுதியில் தொடா்ந்து குப்பைகள் குவிக்கப்படுவதால், கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணிப்போருக்கு தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. நகராட்சி நிா்வாகம் மக்களிடம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிப்பதற்காக நவீன வாகனங்கள், குப்பைக் கூடைகள் பணியாளா்களுக்கு வழங்கியுள்ளன.

ஆனாலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் நகராட்சி நிா்வாகம் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பொறியாளா் டி.கண்ணன் நகராட்சி நிா்வாகத்திற்கு மின்கழிவு மேலாண்மையை செயல்படுத்தப்படுத்த வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

மாவட்டத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 4 நகராட்சிகளுக்கும் மின்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அரசு விதிமுறைப்படி செயல்படுத்த அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சி கழிவு நீா் சுத்திகரிக்கப்படாமல் புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்த ஓடை வழியாக கடலில் கலப்பது குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. கழிவு நீா் சுத்திகரிப்பு சம்பந்தமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா்.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, February 20, 2020

குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த மாபெரும் முற்றுகை போராட்டம்!!

No comments :
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்தும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் டி-பிளாக் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டு கோஷமிட்டபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.



முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசியக்கொடியை கைகளில் ஏந்தியவாறு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரியும் கோஷமிட்டபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.

முன்னதாக அரசு தொழிற் பயிற்சி நிலையம் அருகில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.


இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, February 19, 2020

இராஜசிங்கமங்கலத்தில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா!!

No comments :
இராஜசிங்கமங்கலத்தில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா:

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 

இராஜசிங்கமங்கலம் ஆசாத் தெருக்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 



இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார். மரக்கன்றுகள் மற்றும் பாதுகாப்பு வலைக்கான உதவிகளை அல் மஜூனாஸ் சாகுல், அப்துல் சமது ஆகியோர் செய்திருந்தனர். 

இந்நிகழ்வில் மூஸா வாலிபால் கிளப் தலைவர் முன்தஸர்,கபார் கான் மற்றும் வாலிபால் வீரர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

செய்தி: தினேஷ் சித்தார்கோட்டை

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

விமர்சையாக நடந்த RSமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழா!!

No comments :
இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழாவை திருவிழா போல் நடத்திய முன்னாள் மாணவர்கள்:

இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐன்ஸ்டீன் தலைமை தாங்கினார். ஆசிரியர் இராமகிருஷ்ணன் வரவேற்றார்.முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சசிக்குமார், பகுர்தீன், அப்பாஸ் , கண்ணன், கேசர்கான், கந்தசாமி, அஜ்மீர் காஜா, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினர்களாக வட்டாட்சியர் சாந்தி, ஆசிரியை ஜோதி, உடற்கல்வி இயக்குநர் குமரன், படைப்பு குழும பொருளாளர் சலீம் கான், மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், நேசம் அறக்கட்டளை நிறுவனர் கோட்டைச்சாமி, ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், காதர்மீரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் பாலமுருகன் கலந்து கொண்டு பள்ளி கலை அரங்கத்தை திறந்து வைத்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களது கல்வித்திறனை அதிகப்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமெனவும், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டுமென வலியுறுத்தினார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும், பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகளை தொடச்சியாக முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.








முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

அரசுப்பள்ளியின் வளர்ச்சிக்கு தொடச்சியாக எங்களது பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டுமெனவும், மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பள்ளி ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் மதிய உணவு விருந்து முன்னாள் மாணவர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

ஆண்டு விழாவை முன்னிட்டு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள், கலைத்திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் பிரமாண்டமான திருவிழா போல் நடைபெற்றது.




விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சதக் அப்துல்லா,ஆசிரியர் ராம் குமார், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் அஜ்மீர் கான் , கார்த்திக், சீனிப்பீர், அமீன்,சீனி ஆகியோர் செய்திருந்தனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியாக பள்ளி அருகில் ஆரம்ப காலத்தில் இருந்து தற்பொழுது வரை பெட்டிக்கடை நடத்திவரும் ஐயா பூவலிங்கம் அவர்களை கௌரவித்து நினைவு பரிசு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இராஜசிங்கமங்கலம் ஊர் பொதுமக்கள்,ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவ,மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு ஊர் திருவிழாவை போல் அரசுப்பள்ளியின் ஆண்டு விழாவை கொண்டாடியது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ,நம்பிக்கையையும், சந்தோசத்தையும் ஏற்படுத்தியது.

ஆசிரியர் ஆரோக்கிய சகாயதாஸ் நன்றியுரை கூறினார்.

இவண், நூருல் அமீன், முன்னாள் மாணவர்கள் சங்கம், இராஜசிங்கமங்கலம்,இராமநாதபுரம் மாவட்டம்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, February 16, 2020

ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

No comments :

பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை கலெக்டர் வீரராகவராவ் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1,369 பாகத்தில் 5 லட்சத்து 67 ஆயிரத்து 307 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 69 ஆயிரத்து 193 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் என மொத்தம் 11 லட்சத்து 36 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர்.



கடந்த 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 59 ஆயிரத்து 421 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 60 ஆயிரத்து 959 பெண் வாக்காளர்களும், 70 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் என மொத்தம் 11 லட்சத்து 20 ஆயிரத்து 450 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 23.12.2019 முதல் 22.01.2020 வரை பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 8 ஆயிரத்து 848 ஆண் வாக்காளர்களும், 9 ஆயிரத்து 252 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 18 ஆயிரத்து 101 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல 962 ஆண்கள், 1018 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,982 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களான வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களான தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் துணை கலெக்டர் சுகபுத்ரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, February 12, 2020

கீழக்கரை நகராட்சிக்கு ரூ.5000 அபராதம்; காரணம் தகவல் அறியும் உரிமை சட்டம்!!

No comments :
கீழக்கரை நகராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஆவண கோப்புகளை மனுதாரர் நேரில் சென்று ஆய்வு செய்து தகவல்களை பெற விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் மனுதாரருக்கு மூன்று அண்டுகளுக்கும் மேலாக தகவல் தராமல் அலைக்கழிப்பு செய்த கீழக்கரை நகராட்சி அலுவலகத்துக்கு மாநில தகவல் ஆணையம் ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.


இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹுசைன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழக்கரை நகராட்சியில் குடிநீர் இணைப்புகள், தெரு விளக்குகள், சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு, பொது கழிப்பிடங்கள், பிறப்பு இறப்பு பதிவுகள், உரக்கிடங்கு, இப்பந்த பணிகள், டெண்டர் விபரங்கள், குப்பை தொட்டிகள், சாக்கடை வாறுகால் பராமரிப்பு, உப்பந்த பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் வருகைப் பதிவேடுகள், அலுவலர்களின் சம்பள விபரங்கள், அலுவலக கணக்குகள், வரி வருமானங்கள் நகராட்சி சொத்துக்கள், மத்திய மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட நிதிகள் சம்பந்தமான அனைத்து அசல் ஆவணங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்து தகவல்களை பெற மனு செய்திருந்தார்.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செய்யப்படும் மனுவுக்கு 30 நாள்களுக்குள் பதில் தரப்பட வேண்டும். அனால் உரிய பதில் கிடைக்காததால் மனுதாரர் மேல்முறையீடு செய்திருந்தார். அதன் பின்னரும் நகராட்சி அதிகாரிகளிடமிருந்து பதில் வராததால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்தார். மாநில அணையத்தின் வழக்கு விசாரணையிலும் நகராட்சி அதிகாரிகள் சரியான பதில் எதுவும் அளிக்காததால், மனுதாரர் கீழக்கரை நகராட்சியில் அவணங்களை ஆய்வு செய்து தகவல்களை பெற்றுக் கொள்ள ஆணையம் அனுமதியளித்து உத்தரவிட்டது.





அனால் ஆய்வின் போது, நகராட்சி அதிகாரிகள் முழுமையான தகவல்களை மனுதாரருக்கு வழங்காததால், மாநில தகவல் ஆணையத்தில் மனுதாரர் புகார் மனு தாக்கல் செய்தார்.


இந்நிலையில் மீண்டும் விசாரணை செய்த தகவல் ஆணையம், மனுதாரர் கோரிக்கையை ஏற்று, மனுதாரர் ஆவணங்களை ஆய்வு செய்து தகவல்களை பெற அனுமதி வழங்கியதோடு, இதுவரை முழுமையான தகவல் வழங்கப்படாததால், மனுதாரருக்கு தகவல் பெறும் உரிமை சட்டம், 2005 பிரிவு 19(8) பின் கீழ் இழப்பீடாக நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.5000/- வழங்க வேண்டும் என மேல் முறையீட்டு அலுவலரான நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, February 11, 2020

கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் எலெக்ட்ரீசியன்/ பிளம்பர்க்கான இலவச பயிற்சி!!

No comments :

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எலெக்ட்ரீசியன் உதவியாளர், பிளம்பர்க்கான மூன்று மாத இலவச பயிற்சி.

தகுதி. 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு..
தினமும் ரூ 100 போக்குவரத்து உதவி தொகை வழங்கப்படும். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்:15.02.2020,
பயிற்சி துவங்கும் நாள்: 20.02.2020,
பயிற்சி இடம்: முகம்மது சதக் கல்லூரி, கீழக்கரை

மேலும் விபரங்களுக்கு :
9025416240, 9487036462, 9994438294, 9994650430

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, February 8, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் ACTIVESHOP செயலி; நம்ம ஊரு ’ஆப்’, நம்பிக்கையான ‘ஆப்’!!

No comments :
ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை மக்களின் பயன்பாட்டிற்கு உங்கள் Activeshop App ஐ டவுன்லோட் செய்து... 
நீங்கள் இருந்த இடத்தில் இருந்து அனைத்து விதமான பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம்.



கைபேசி செயலி மூலம் உங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் “ACTIVESHOP” தற்போது நமது கீழக்கரையில்..!!

ஆன்லைன் மூலம் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள், கை குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், உணவு வகைகள், மருந்துகள், ஆடை வகைகள் போன்ற அனைத்தையும் எங்கள் செயலி மூலம் தேர்வு செய்யுங்கள்.. உங்கள் வீட்டு வாசல் வரை எங்களின் சேவை தொடரும்..!!

உங்களின் ஆடரை நீங்களே கூகுள் மேப் மூலம் கண்காணிக்கலாம்..!! குறித்த நேரத்தில், தாமதமின்றி உங்களை நாங்கள் வந்து சேருவோம்..!!

வீடியோ:



இப்போதே டவுன்லோட் பண்ணுங்கள்:

ActiveShop Google Play store App Download Link : bit.ly/2XvJFqo

ActiveShop IPhone App Download Link : bit.ly/2OSj42K


Ramanathapuram stores

Restaurants
1. Ibrizz Kitchen
2. Sri Aiswarya Hotel
3. Hotel Vasantham
4. Bheemas idly Dosa corner
5. Hotel Aiswarya Lakshmi
6. Kida Kari
7. Hotel Chola
8. Hotel Akshayabhavan
9. shree Hotel
10. Hotel Chickkin
11. Restoran Thoulath Maju

Juices & Beverages
1. Koyembed Fresh Juice
2. Lassi Spot

Supermarket
1. RK Supermarket
2. Koyembed Market

Building Materials
1. Asian Building Materials Pvt Ltd

Furniture
1. Life & Living Furniture
2. Budget Furniture

Stationaries
1. Erbath Stationaries
2. Samy Stationeries

Opticals
1. MyMoon Opticals

Bakeries

1. Aiswaryaas Bakerys - Kenikarai
2. Aiswaryaass bakeries - Bharathi Nagar
3. Aiswarya S Bakeroes - Salam Street
4. Aishwarya bakeries- Aranmanai

Pharmacy
1. Bawaa Medicals

Clothes
1. Boo Bros men’s wear
2. FashionScope

Keelakarai Stores

Restaurant
1. Gopi idli Kadai
2. My Chicken Express
3. Maraikas Sandwich Cafe
4. Ra Kitchen
5. Al Sulthan Fast Food
6. AVT Fried Chicken
7. Masha Allah Fast Food

Bakeries
1. Raviath Sweet Palace
2. Kilakarai Sellakani Thothal & Halwa

Super Market
1. BH bazaar
2. Indian SuperMarket

Hardware Shop
1. New Chennai Hardware

Pharmacy
1. Ibrahim medical
2. Dheen Medicals

Common Store
1. Mamy Poko Diapers Shop
2. Mobile Case Shop
3. Idiappam Kadai
4. Organic Muttai Kadai
5. SM Maasi kadai
6. Seeni Kadalai kadai

Juices and beverages
1. Madurai Jigarthanda
2. Al Ihsan Cool drinks
3. Lassi Spot

Clothes
1. AS Lungies


முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்!!
உங்கள் வியாபரம் பல்கிப்பெருகட்டும்!!

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் நகராட்சியில் வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத ஆறு கடைகளுக்கு "சீல்"!!

No comments :
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத ஆறு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாத பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டது.


ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்ட செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகையை நகராட்சி நிர்வாகம் வட்டியுடன் நபார்டு வங்கிக்கு செலுத்தி வருகிறது. அத்துடன், குடிநீர் விநியோகத்திற்கான பராமரிப்பிற்காக மாதா மாதம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.10 லட்சம் நகராட்சி செலுத்துகிறது.


அத்துடன், மக்களுக்கான ரோடு வசதி, தெரு விளக்கு வசதிகளுடன், நகராட்சி ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.நகராட்சி செலவினத்தை சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர், பாதாள சாக்கடை வரிகள், நகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் இருந்து பெறப்படும் வாடகை வசூல் மூலம் ஈடு செய்யப்படுகிறது.



நகராட்சிக்கான சிறப்பு நிதி வழங்கப்படாத நிலையில், வரி வசூல் மூலம் நகராட்சியில் நலத் திட்டங்களை செயல்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அலுவலர்கள் கூறுகின்றனர். நகராட்சியில் கடந்தாண்டு நிலுவைத் தொகையுடன் ரூ.17 கோடி வருவாய் பாக்கி வர வேண்டி உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக சொத்து வரி உள்ளிட்டவை மூலம் ரூ.7 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.


குடிநீர் கட்டண வரியாக ரூ1.50 கோடியும், பாதாள சாக்கடை இணைப்பு வரியாக ரூ.1.60 கோடியும்,தொழில் வரி ரூ.25 லட்சமும் நிலுவை உள்ளது.நகராட்சியில் நடப்பு ஆண்டு வருவாய் 60 சதவீதம் வந்துள்ளதாகவும், நிலுவைத் தொகை 40 சதவீதம் வர வேண்டியுள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.


இந்நிலையில், வரி வசூலை தீவிரப்படுத்தும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான சந்தை திடல் பகுதியில் உள்ள கடைகளில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரி செலுத்தாத 10 க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, February 5, 2020

சித்தார்கோட்டை கிராம சபை கூட்ட தீர்மானங்கள்!!

No comments :
சித்தார்கோட்டை ஊராட்சியில் ஜனவரி 26 நடைபெற்ற கிராம சபை கூட்டம்

சித்தார்கோட்டை ஊராட்சியில் ஜனவரி 26 இன்று 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் திருமதி.மு.முஸ்தரி ஜஹான் முகம்மது ரைசுதீன்
அவர்களின் தலைமையில் ஊராட்சி பற்றாளர், ஊராட்சி செயலாளர் திரு முனியசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் மக்கள் பாதை பொறுப்பாளர் தினேஷ் குலசை அக்னி சிறகுகள் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்





ஜனவரி 26 கிராம சபைக்கு அரசின் சார்பில் முன்மொழியப்பட்ட தீர்மானம் வாசிக்கப்பட்டவையை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கிராமம் சார்ந்த தீர்மானத்தை முன் வைத்தனர்.

அவற்றில்
விவசாயத்திற்கு ஆற்றில் பாலம் அமைக்க, 
உப்பளத்தில் இருந்து வரும் நீரை விவசாய நீருடன் கலப்பதைத் தடை செய்யவும், 
புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைத்துத்தரவும், 
தெருவிளக்கு விரிவுபடுத்துதல் 
குடிநீர் குழாய் அமைத்தல் 
நியாயவிலைக் கடைகள் புதிதாக அமைத்தல் 
சாலை வசதி 
சமுதாயக்கூடம் 
நீர் நிலைகள் அனைத்தையும் தூர்வாரப்பட்டு அதன் ஓரங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை நடவு செய்தல் 

போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் கிராம ஊர் தலைவர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்

செய்தி: திரு. தினேஷ், சித்தார்கோட்டை

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் TASMAC –லிருந்து ரூ.1. 07 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு!!

No comments :


ராமநாதபுரத்தில் உள்ள மதுபானக் கடையில் ஞாயிற்றுக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் ரூ.1. 07 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா்.

ராமநாதபுரம் மாடக்கொட்டான் பகுதியில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்தக் கடையின் முன்பக்கக் கதவை ஞாயிற்றுக்கிழமை உடைத்த மா்ம நபா்கள், உள்ளே புகுந்து பீா் உள்ளிட்ட மதுப்பாட்டில்கள் அடங்கிய 20 பெட்டிகளை திருடியுள்ளனா்.
மேலும் தனியாக வைத்திருந்த மது பாட்டில்களையும் திருடிச் சென்றுள்ளனா். அவற்றின் மதிப்பு ரூ. 1. 07 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.


இது குறித்து கடையின் விற்பனையாளா் அருண் கேணிக்கரை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலாந்தரவை, பட்டிணம்காத்தான் பகுதியில் மதுக்கடைகளில் மா்மநபா்கள் திருடியதும், திருப்புல்லாணி பகுதியில் அரசு மதுபானக்கடை ஊழியா்களைத் தாக்கி பணத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, February 4, 2020

முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

No comments :
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் வழங்கப்படும் முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் பன்னாட்டு அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும்
2 ஆண்கள் 2 பெண்கள் என விளையாட்டு வீரர்கள்,
2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு
முதல்வர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.




இதற்காக விருது வழங்குவதற்கு முந்தைய மூன்று ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்தும்
ஒரு நடத்துநர், நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாளர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர். ஆட்ட நடுவர், நீதிபதி ஆகியாருக்கு முதல்வர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.

விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in இணைதளம் மூலம் பெற்றுகொள்ளலாம்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த திடீர் சோதனையில் 1,074 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினா் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட 1,074 புகையிலைப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம், திருவாடானை, தேவிபட்டினம், பரமக்குடி, கமுதி, கீழக்கரை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடைகளில் காவல்துறையினா் சோதனை மேற்கொண்டனா்.


கேணிக்கரை பகுதியில் 3 இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் அடங்கிய 268 கிராம் எடையுள்ள 120 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பரமக்குடியில் 167 பாக்கெட்டுகளும்,
கமுதியில் 34 பாக்கெட்டுகளும்,
முதுகுளத்தூா் பகுதியில் 80 பாக்கெட்டுகளும்,
திருவாடானையில் 175 பாக்கெட்டுகளும் புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அதிகபட்சமாக கீழக்கரையில் 505 புகையிலைப் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.



தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 34 போ் மீது வழக்குப்பதிந்து, கைது செய்த நிலையில், அவா்கள் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, February 3, 2020

சவூதியில் நடந்த, தமிழ் நண்பர்கள் பங்குபெற்ற கைப்பந்து போட்டி!!

No comments :
சவுதி அரேபியா – ஜித்தா மாநகரில் அல் ஃபனேயா நிறுவனத்தின் சார்பில் இடைநிலை கைப்பந்து போட்டி வியாழன் இரவு நடந்தது.







முதன்மை விருந்தினராக அல்பானியா உரிமையாளர் திரு.அப்துல் அஜீஸ் முன்னிலை வகித்தார்.
அல் ஃபனேயா நிறுவன பொது மேலாளர் திரு. சீனி அலி (கீழக்கரை) மற்றும் மண்டல இயக்குனர் திரு. சதக்கத்துல்லாஹ் (காயல்பட்டிணம்) சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டனர்.


நான்கு அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் POUNCING JAGUARS & PRIME RANGERS ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.





இதில் அணி POUNCING JAGUARS அணி நேர் செட்களில் வென்று கோப்பையை தட்டிச்சென்றது.
1500 ரியால் பரிசும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பெற்ற  அணிக்கு PRIME RANGERS 1000 ரியால் பரிசு வழங்கப்பட்டது.


செய்தி: ஹமீது ராஜா, ஜித்தா-சவூதி அரேபியா.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் அருகே எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் கடும் எதிா்ப்பு!!

No comments :

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில் விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூா், வாலாந்தரவை, தெற்கு காட்டூா், திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாலாந்தரவை பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்லும் பணிக்கு விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனா். இதனால் விவசாயிகள் குழாய் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து ராமநாதபுரம் போலீஸாா் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்படாததால் குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.



இதுகுறித்து அப்பகுதி விவசாயி சரவணன் கூறியது:

சுமாா் 20 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதால், இப்பகுதியில் விவசாய நிலங்கள் முற்றிலும் பாழ்பட்டு விட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரம் இப்பகுதியில் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் அனுமதியில்லாமல் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகள் அத்துமீறி ஈடுபட்டு வருகின்றனா். இதனை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதேபோல் மதுரையிலிருந்து கமுதி, இடைச்சூரணி, தலைவநாயக்கன்பட்டி, நெடுங்குளம் வழியாக நரிப்பையூருக்கு விளைநிலங்கள் வழியாக இந்தியன் ஆயில் காா்பரேஷன் நிறுவனம் மூலம் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் காட்சிப் பொருளாக பேட்டரி கார்!!

No comments :
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி கார் இயக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதால் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ரயிலில் ஏற முடியாமல் தவிக்கின்றனர்.


இங்கு பயணிகள் வசதிக்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இந்த கார் வழங்கப்பட்டது. இதில் பேட்டரி பழுதால் கடந்த ஏழு மாதங்களாகஇயக்கப்படாமல் உள்ளது.


இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டிகளில் ஏறுவதற்குமிகவும் சிரமப்படுகின்றனர்.பேட்டரி பழுதை நீக்கி பயணிகளுக்கு பயன்படும் விதத்தில் செயல்படுத்த ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஏழு மாதங்களாக பயன்பாடின்றி காட்சிப் பொருளாக துருப்பிடித்து வீணாகும் அவல நிலை உள்ளது.


ரயில்வே கோட்ட முதுநிலைவணிக மேலாளர் பிரசன்னா கூறுகையில், தமிழக சுற்றுலாவளர்ச்சி கழகம் சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி கார் பேட்டரி பழுதால் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்து பயணிகளுக்காக இயக்கப்படும், என்றார்.

செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.