முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 19, 2017

பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால் 500 ரூபாய் அபராதம்!!

No comments :
பாம்பன் பாலத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,என போலீசார் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரோடு பாலம் முக்கியமானது. ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் தங்களின் கார் உள்ளிட்ட வாகனங்களை சாலை பாலத்தில் வரிசையாகநிறுத்தி, ரயில் துாக்குபாலத்தையும், கடல் அழகையும் ரசிக்கின்றனர். இதனால், பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் நடக்கின்றன.


இதையடுத்து, இங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, பாலத்தில் இனி வாகனங்களை நிறுத்தினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அனைத்து வாகனங்களும் 30 கி.மீ., வேகத்தில் தான் செல்ல வேண்டும், என அறிவித்துள்ளார்.


இதுகுறித்து, சுற்றுலாப்பயணிகள், வாகன ஓட்டிகள் அறியும் வகையில், பாலத்தின் பல இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் டி.எஸ்.பி., ரமேஷ் தலைமையில் ரோந்து பணியும் நடக்கிறது. பாம்பன் போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து இப்பணியை செய்கின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை முக்கிய சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி!!

No comments :
கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதி கமானோர் வசித்து வருகின்றனர். 21 வார்டுகள் உள்ளன. மேலும் வளர்ந்து வரும் புறநகர் பகுதிகள் ஏராளமாக உள்ளன.

நகராட்சி அலுவலகத்தின் ஒருபகுதியில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 26 வருவாய் கிராமங்களை உள் ளடக்கிய கிராமப்புற, புறநகர்பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பஸ்கள், டூவீலர், ஆட்டோக்கள் மூலம் அலுவலகத்திற்கு வருகின்றனர். 


இங்கு டிராபிக் போலீ சாருக்கான தனிப்பிரிவு இல்லாததால் சட்டம் ஒழுங்கு போலீசாரே எல்லாப் பணிகளையும் செய்வதால்பகல்இரவு நேர ரோந்தில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. 
கூட்ட நெரிசல் அதிகம் உள்ள வி.ஏ.ஓ.சாவடிபுதிய பஸ் ஸ்டாண்ட்வள்ளல் சீதக்காதி சாலைஇந்து பஜார்கமுதி பால் கடைவங்கிகள் அதிகம் உள்ள முஸ்லிம் பஜார் ஆகிய இடங்களிலும்காலை 8:00 முதல் 10 :00 வரையிலும்மாலையில் 4:30 முதல் 7:30 மணி வரையிலும் பள்ளிகல்லுாரி மாணவர்கள்பொதுமக்கள் ஆகியோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். 



வளர்ந்து வரும் நகரமாக கீழக்கரை உள்ளதால் நகரின் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும். இதனால் இரவு நேரங்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவது பெருமளவு கட்டுப் படுத்தப்படும். 

பள்ளிக்கூடங்களுக்கு சைக்கிள், பள்ளி வேன்களில் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஒவ்வொரு கடைகளின் முன்புறமும் டூவீலர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதால், வாகனங்கள் செல்ல வழியில்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.

எனவே குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். 
எனவே குறைகளை போக்க போலீசாருடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றி நிலையான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.


செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)