(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 4, 2015

கீழக்கரையில் இலவச கணினி பயிற்சி மையம்!!

No comments :


கீழக்கரை கிழக்கு நாடார் தெருவில் பெருந்தலைவர் காமராஜர் இலவச கணினி பயிற்சி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, ஆடவர் குழு தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். 

கணினி பயிற்சி மையத்தை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பழனி திறந்து வைத்தார். காசிநாதன் முன்னிலை வகித்தார். கணிணி பொறியாளர் சக்திவேல் ராஜன், சேகர், ரவி, ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


உபகரணங்களை, காமராஜர் சமூகநீதி பேரவையினர் வழங்கினர். இம்மையத்தில், தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
பயிற்சியாளர் சுப்ரியா நன்றி கூறினார்.
  
செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment