(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 19, 2015

ராமநாதபுர மாவட்ட வேலை வாய்ப்பு முகாம்

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் டயாம்லர் நிறுவனம் மூலம் வருகிற 21, 22–ந்தேதி  சிவகங்கை வாரச் சந்தை ரோடு மன்னர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. 
இந்த முகாம் 18 வயது முதல் 26 வயது உடைய ஆண்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. கல்வித்தகுதி 12–ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி வரை. இணைப் பயிற்சியாளர் பதவிக்கு 36 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். ஊதியம் மாதம் ரூ.9,200 வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் வேலை தேடுபவர்கள் மட்டும் இதில் கலந்துகொள்ளலாம்.

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment