(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 3, 2017

கீழக்கரையில் டி.எஸ்.பி க்கு பிரிவு உபசார விழா!!

No comments :
கீழக்கரையில் டி.எஸ்.பியாக 2 ஆண்டுகள் பணியாற்றியவர் மகேஸ்வரி. இவர் தற்போது விருதுநகர் மாவட்டத்திற்கு பணிமாறுதலில் செல்கிறார். இவருக்கு கீழக்கரை பொதுமக்கள் சார்பில் பிரிவு உபசாரவிழா நடத்தப்பட்டது.

விழாவில் செய்யது இபுராகிம் தலைமை வகித்தார். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம்ராஜா மற்றும் அனைத்து ஜமாத்தார்கள், சமூக நல அமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், கீழக்கரை நாடார் மெட்ரிக் பள்ளி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.




டிஎஸ்பிக்கு சாதனையாளர், நேர்மையாளர், சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டது.இதில் டிஎஸ்பி மகேஸ்வரி பேசியதாவது, எனது சிறப்பான பணிக்கு கீழக்கரை மக்களின் ஒத்துழைப்புதான் காரணம். எங்கிருந்தாலும் இப்பகுதி மக்களை நான் என்றும் மறக்க மாட்டேன். எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment