(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 24, 2015

FACEBOOK , TWITTER ல் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இனி கைது இல்லை!!

No comments :
FACEBOOK , TWITTER போன்ற சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன் இத்தகைய கைது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிற தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் சேர்க்கப்பட்ட 66 ஏ பிரிவின் படி, சமூக வலைதளம், மின் அஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறான கருத்துகளை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும்.

இந்த 66 ஏ பிரிவின் படி நாடு முழுவதும் வலைதளங்களில் சர்ச்சை கருத்தை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 66- ஏ சட்டப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டப்பிரிவு தெளிவானதாக இல்லை.

அரசாங்கம் என்பது வரலாம், போகலாம். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் சாசனத்தில், அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 66-ஏ பிரிவு செல்லாது. வலைதளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார் என்பதற்காகவே ஒருவரை கைது செய்யவும் தடை விதிக்கப்படுகிறது என்று அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது.

No comments :

Post a Comment