(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 19, 2015

தேவிபட்டினம் பஸ் நிலையம் பணிகள் நிறைவு. திறப்பு விழா எப்பொழுது?!

No comments :
தேவிபட்டினம் பஸ் நிலையத்தில் பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

பஸ் நிலையம்

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்சாலை அருகே உள்ள தேவிபட்டினம் பாண் டிச்சேரி, சென்னை, நாகூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அறந்தாங்கி, வேளாங்கண்ணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து செல்லும் பஸ், சுற்றுலா பயணிகளுக்கு பெரும் வசதியாக உள்ளது. தேவிபட்டினம் சுற்று வட்டார பொதுமக்கள் இங்கிருந்தே பல் வேறு இடங்களுக்கு பஸ்களில் சென்று வருகின்றனர். சுற்றுலா பயணிகள் ஏராளமா னோர் கடலுக்கு அமைந்து நவபாசானத்துக்கு வந்துசெல் கின்றனர்.

தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன் தொடர் முயற்சி மேற் கொண்டு மாவட்ட கலெக்டர் நந்தகுமாரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அவர் பரிசீலனை செய்து அரசு மூலம் தேவிபட்டி னத்தில் பஸ் நிலையம் அமைக்க உடனடி தீர்வு காணப்பட்டது.
இதன் பயனாக ரூ.1 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் கடந்த 23.5.2014–ல் தொடங்கியது. 



திறப்பு விழா: 

ராமநாதபுரம் யூனியன் என் ஜினீயர் இளங்கோ மேற்பார் வையில் பணிகள் மும்முரமாக நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிவ டைந்துள்ளது. இங்கு இருபுற மும் பிராண்ட நுழைவு வாயில், வணிக வளாகம், ஏற்கனவே உள்ள வணிக வளாக மராமத்து, நவீன கழிப் பறைகள், பயணி கள் ஓய்வு எடுக்கும் அறை, 6 பஸ்கள் நின்று செல்வதற்கான நிழற் குடை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

கலெக்டர், ஊராட்சி தலைவர் நடவடிக்கையால் தேவிபட்டினம் பஸ் நிலையம் விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இதனை ஆவலுடன் இந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment