(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 27, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-2 தேர்வில் 9525 பங்கு கொண்டனர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2 தேர்வை 9525 பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 1241 காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்யும் குரூப்-2 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12,079 பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 1433 பேரும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 1121 பேரும் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து மீதம் உள்ள 9525 பேர் இந்தத் தேர்வை எழுதினர். மாவட்டம் முழுவதும் 38 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது.

தேர்வு மையங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி அக்பர்அலி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி பதற்றமான மையமாக கருதப்பட்டு அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
தேர்வு நடைபெறுவதை 6 பறக்கும் படையினரும், 9 நடமாடும் படையினரும் தீவிரமாக கண்காணித்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செய்தி: தினசரிகள்


No comments :

Post a Comment