(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 27, 2015

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை!!

No comments :
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.


தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் குழந்தைகளுக்கு பிளஸ் 1 முதல் முதுகலை பட்டப்படிப்பிற்கு புத்தக நிதி, இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் கல்வி, உடற்கல்வி பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பத்திற்கு
செயலாளர்,
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்,
த.பெ.எண் 718,
தேனாம்பேட்டை,
சென்னை 8


என்ற முகவரிக்கு சுய முகவரியிட்ட தபால் தலை ஒட்டிய உறையுடன் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப அக்டோபர் 31 கடைசி நாள் ஆகும்.

No comments :

Post a Comment