(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 27, 2015

ராமநாதபுர மாவட்டத்தில் நடந்த எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வில் 27 பேர் தேர்வு!!

No comments :
ராமநாதபுரத்தில் நடந்த எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வில் 27 பேர் தேர்ச்சி பெற்றனர்.


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு மே 23, 24 தேதிகளில் நடந்தது. சில நாட்களுக்கு முன் வெளியான முடிவுகளின் படி ராமநாதபுரத்தில் 8 பெண் உள்பட 27 பேர் தேர்வாகியுள்ளனர்.


ராமநாதபுரம் சப் டிவிஷனில் 4,
முதுகுளத்தூர், கீழக்கரையில் தலா 6,
கமுதி, திருவாடானையில் 2,
பரமக்குடி சப் டிவிஷன், ஆயுதப்படை, கமுதி அதிரடிப்படை, மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகம், நெடுஞ்சாலை ரோந்து பிரிவுகளில் தலா ஒருவர் தேர்ச்சி பெற்றனர்.

பொதுப்பிரிவில் 5 பேரும், விளையாட்டு பிரிவில் 2 பேரும், போலீஸ் ஒதுக்கீட்டில் 20 பேரும் இடம் பிடித்தனர்.

செய்தி: தினசரிகள்

வெற்றி பெற்றவர்களுக்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.

No comments :

Post a Comment