(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, July 9, 2015

கீழக்கரை நகராட்சி ஆணையர் இடமாற்றம்.!!

No comments :
கீழக்கரை நகராட்சி ஆணையராக உள்ள செ. முருகேசன், சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியங்குடி நகராட்சிக்கு புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


புதிய ஆணையராக, உசிலம்பட்டி நகர்மன்ற ஆணையராகப் பணியாற்றிய எஸ். மருது விரைவில் கீழக்கரையில் பொறுப்பேற்க உள்ளார். இவர் ஏற்கெனவே, கீழக்கரை நகராட்சியில் தலைமைக் கணக்காளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணையரை மாற்றக்கூடாது என்று அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் அறிவித்து, பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

No comments :

Post a Comment