(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 30, 2015

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நீராதார நிலைகளிலுள்ள காட்டுக்கருவேல மரங்கள் ஒரு மாதங்களில் அகற்றப்படும்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறுகள், கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களில் உள்ள காட்டுக்கருவேல மரங்கள் ஒரு மாதத்தில் பொதுப்பணித்துறையினரால் அகற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார். 

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஹரிவாசன், நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் மதியழகன்  உள்ளிட்ட வேளாண்துறை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் 72 கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சோழாந்தூர் பாலகிருஷ்ணன், ‘‘கடந்த 2013-14ம் ஆண்டில் மழை பொய்து விவசாயம் இல்லாமல் போனது. பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள புஞ்சை நிலங்களில் காட்டுக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்டத்தில் காட்டுக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். 

பரமக்குடி வட்டார விவசாயி கண்ணப்பன், ‘‘மூவாயிரம் ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிரிடப்படும் முண்டு(குண்டு) மிளகாய் சீஷனில் நாற்றுச்செடி கிடைக்காமல் அவதிப்படுகிறோம். நாற்றுச் செடிகளுக்கு வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர், ‘‘முண்டுமிளகாய் வேளாண்மைத் துறையால் அங்கீகரிக்கப்படவில்லை. சம்பா மிளகாய் நாற்று வேண்டுமானால் ஏற்பாடு செய்கிறோம்’’ என்றார்.
பெரியகண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாலசுந்தரமூர்த்தி, ‘‘பெரியகண்மாய் மற்றும் வரத்துகால்வாய்கள் உள்ள காட்டுக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கலெக்டர், ‘‘பொதுப்பணித்துறையினர் ஒரு மாதத்தில் ஆறுகள், கண்மாய்கள், வரத்துகால்வாய்களில் உள்ள காட்டுக்கருவேல மரங்களை அகற்ற உள்ளனர்’’ என்றார்.   களத்தாவூர் சுந்தர்ராஜன், ‘‘கமுதி தாலுகாவில் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது’’ என்றார்.கலெக்டர், ‘‘நிலம் கையகப்படுத்துவதற்கும் அரசுக்கு சம்பந்தமில்லை. தனிநபர், தனிநபர்களிடம் நிலத்தை வாங்குகிறார். இதில் அரசுக்கு சம்பந்தமில்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment