(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 16, 2015

செப்.21ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செப்.21இல் நடக்க உள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 21 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.



மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment