(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 9, 2015

கோலாகலமாக நடந்த ஏர்வாடி தர்காவில் சந்தனக் கூடு திருவிழா!!

No comments :
ஏர்வாடி தர்காவில் சந்தனக் கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா நேற்று அதிகாலை நடந்தது. 

விழாவையொட்டி முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டு வந்த தண்ணீரால் தர்கா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. சந்தனக்கூட்டின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் செய்து கொடுத்தனர். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகியவற்றை யாதவர்களும், ஆதி திராவிடர்களும் அலங்கரித்தனர். 


அதைத்தொடர்ந்து தீப்பந்தங்களுக்காக சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதி திராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணையை ஊற்றி சந்தனக்கூடுக்கு வழிகாட்டியாக தீப்பந்தம் கொண்டு வரப்பட்டது. 


இவ்வாறு அழகுபடுத்தப்பட்ட சந்தனக்கூடு நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் குடியிருக்கும் தைக்கா பகுதியில் இருந்து யானை, குதிரைகளில் இளம்பச்சை கொடிகள் ஏந்தி வர, தர்காவை நோக்கி புறப்பட்டது. ஊர்வலத்தில் மேளதாளம் முழங்க அனைத்து மத பக்தர்களின் ஆட்டம், பாட்டத்துடன் சந்தனக்கூடு வந்தது.


மதநல்லிணக் கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த சந்தனக்கூடு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து தர்காவை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து வெள்ளிப் பேழையில் வைத்து எடுத்து வரப்பட்ட புனித சந்தனம் மகானின் சமாதியில் பூசப்பட்டது. 

ஏற்பாடுகளை தர்கா நிர்வாக சபைதலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் செய்யது பாருக் ஆலிம், பொருளாளர் செய்யது சிராஜுதீன் மற்றும் உறுப்பினர் கள் செய்திருந்தனர். விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment