(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 12, 2015

ஷார்ஜாவில் நாளை 13ம் தேதி கவிப்பேரரசர் வைரமுத்து எழுதிய சிறுகதை தொகுப்பு நூல் அறிமுக விழா!!

No comments :

கவிப்பேரரசர் வைரமுத்து எழுதிய சிறுகதை தொகுப்பு நூல் அறிமுக விழா ஷார்ஜாவில் நாளை 13ம் தேதி நடைபெறுகிறது. 

கவிப்பேரரசர் வைரமுத்து எழுதிய சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த மாதம் 10ம் தேதி சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி புத்தகத்தை வெளியிட அதை உலக நாயகன் கமல் ஹாஸன் பெற்றுக் கொண்டார்.

புத்தகம் குறித்த ஆய்வுரையை பிரபல சொற்பொழிவாளர் பர்வீன் சுல்தானா வழங்கினார். இந்நிலையில் வைரமுத்து சிறுகதைகள் புத்தகத்தின் அறிமுக விழா வரும் 13ம் தேதி ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. 

அமீரகத்திற்கான இந்திய தூதர் மேதகு சீதாராமன் நூலை அறிமுகம் செய்து வைக்கிறார். வைரமுத்து ஏற்புரை வழங்குகிறார். 
விழா ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள அறை எண் 5ல் மாலை 7. 45 மணி முதல் நடைபெறுகிறது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment