(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 20, 2015

ராமநாதபுரத்தில் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு!!

No comments :
ராமநாதபுரத்தில் வீட்டின் மேற்கூரை வழியாக உள்ளே இறங்கி ரூ.1.20 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். 

ராமநாதபுரம் ராணித் தோப்பு பகுதி பெரியார் நகரில் வசித்து வரும் வெள்ளையன் மகன் ராஜ்குமார் (40). இவர், வீட்டில் இல்லாத போது வீட்டின் மேற்பகுதி வழியாக உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், வீட்டில் இருந்த பீரோவினை உடைத்து நாலரை பவுன் தங்க நகை மற்றும்  ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.




திருடப்பட்ட நகை,பணத்தின் மொத்த மதிப்பு  ரூ.1.25 லட்சமாகும்.  இச்சம்பவம் தொடர்பாக, ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment